Ad Widget

தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள தகவல்!

உயிர்த்த ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுடன் தொடர்புடையோர் இன்னும் சிலரே எஞ்சியுள்ளனர் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் நேற்று (வியாழக்கிழமை) சிவில் சமூகப் பிரதிநிதிகளைச் சந்தித்தபோதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

இந்த தாக்குதல்களுடன் தொடர்புடைய பலர் கொல்லப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அத்தோடு ஏனைய பலர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் எஞ்சிய சிலரே இன்னமும் கைது செய்யப்படாமல் உள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.

கடந்த மாதம் 21ஆம் திகதி இலங்கையிலுள்ள கிறிஸ்தவ தேவாலயங்களிலும் பிரபல நட்சத்திர விடுதிகளிலும் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதல்களில் 250இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.

அதனைத்தொடர்ந்து இந்த தாக்குதல்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றது. அதன் பின்னர் இந்த தாக்குதல்கள் தொடர்பில் இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலும் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்தோடு தொடர்ந்தும் முப்படையினரால் சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்மை குறிப்பிடத்தக்கது.

Related Posts