Ad Widget

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மக்கள் சந்திப்பு நாளை யாழில்!

உள்ளுாராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மக்கள் சந்திப்பொன்று, நாளை (புதன்கிழமை) யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.

‘நிரந்தரத் தீர்வு நோக்கிய பயணத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் வகிபாகம்’ என்ற தொனிப்பொருளிலான குறித்த சந்திப்பு, யாழ். இலங்கை வேந்தன் கலைக் கல்லூரி மண்டபத்தில் காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.

யாழ். மாநகர சபை வேட்பாளர் ம.அருள்குமரன் தலைமையில் இடம்பெறவுள்ள இச் சந்திப்பில், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ரெலோ அமைப்பின் செயலாளர் ந.சிறீகாந்தா, வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் மற்றும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் இம்மானுவல் ஆர்னோல்ட் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.

Related Posts