Ad Widget

தமிழர்களின் முக்கிய விடயங்கள் குறித்து ஜனாதிபதியிடம் கூட்டமைப்பு எடுத்துரைப்பு!

தொல்பொருள் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் என்பவற்றால் மக்கள் பாதிக்கப்படுவது தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஜனாதிபதிபதியிடம் எடுத்துரைத்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற சந்திப்பின்போதே இந்த விடயம் தொடர்பாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

இதனுடன் காணிகள் விடுவிக்கப்படாமை மற்றும் பௌத்த தேரர்களால் கன்னியா, நீராவியடி உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் அத்துமீறல்கள் தொடர்பாகவும் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்வதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இல்லாத காரணத்தால் இந்த பேச்சுவார்த்தை மீண்டும் எதிர்வரும் 28ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

இந்த சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுமந்திரன், சித்தார்தன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts