Ad Widget

தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு: மாவை தலைமையில் கலந்துரையாடல்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா நேற்று (வியாழக்கிழமை) மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொண்டார்.

இதன்போது கட்சியின் உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகள் மற்றும் கட்சி உறுப்பினர்களுடன் கலந்துயாடலும் இடம்பெற்றது.

இதில் முக்கியமாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் 16ஆவது தேசிய மாநாடு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டன.

அத்துடன் கட்சியின் எதிர்காலச் செயற்பாடுகள், தற்போதைய அரசியல் சூழ்நிலைகள், புதிய உறுப்பினர்களை இணைத்தல் குறிப்பாக இளைஞர்களை உள்வாங்கிக் கொள்ளல் உட்பட பல்வேறு விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டன.

இக்கலந்துரையாடலில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராஜசிங்கம், மட்டக்களப்பு மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.ஸ்ரீநேசன், இலங்கை தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட துணைத் தலைவர் பொன்.செல்வராசா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன், உள்ளுராட்சி மன்றத் தவிசாளர்கள், கட்சியின் நிர்வாகச் செயலாளர் குலநாயகம், பொருளாளர் கனகசபாபதி, உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், கட்சிக் கிளைகளின் பிரதிநிதிகள், வாலிபர் முன்னணியின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Related Posts