Ad Widget

சுகாதார விதிமுறைகளை மீறி திருவிழா செய்ததாக உபயகாரர் உள்ளிட்ட நால்வர் சுயதனிமைப்படுத்தலில்

கோரோனா சுகாதார விதிமுறைகளை மீறி ஆலயத்தில் திருவிழா நடத்திய உபாயகாரர் உள்ளிட்ட நான்கு பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

காரைநகர் களபூமி பகுதியில் உள்ள ஆலயத்தில் வருடாந்திர மகோற்சவம் நடைபெற்று வருகின்றது. இன்றைய தினம் தேர் திருவிழா நடைபெறவுள்ள நிலையில் நேற்றைய தினம் சப்பர திருவிழா நடைபெற்றது.

காரைநகர் சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தல்களை மீறி ஆலயத்தில் பெருமளவானோர் சப்பர திருவிழாவில் கூடியிருந்தனர்.

சுகாதார விதிமுறைகள் , கட்டுப்பாடுகளை மீறி 50க்கும் மேற்பட்டோர் உரிய முறையில் முகக் கவசங்கள் இன்றியும் , சமூக இடைவெளிகளை பேணாதும் திருவிழாவில் கூடி இருந்தனர் என்று சுகாதாரத் துறையினரால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அதனை அடுத்து, ஆலயத்திற்கு சென்றிருந்த சுகாதார மருத்துவ அதிகாரி, பொது சுகாதார பரிசோதகர் ஊடாக ஆலயத் திருவிழாவினை நிறுத்தி, ஆலய குருக்கள் , உபாயக்காரர் , ஆலய நிர்வாகத்தை சேர்ந்தோர் உள்ளிட்ட நான்கு பேரை தனிமைப்படுத்தி உள்ளனர்.

Related Posts