Ad Widget

சிறுவர்களுக்கு மோட்டார் சைக்கிள்களை கொடுத்த ஆசிரியருக்கு தண்டம்

18 வயதிற்கு குறைந்த இரு சிறுவர்களுக்கு மோட்டார் சைக்கிள்களை செலுத்தக்கொடுத்த முன்பள்ளி ஆசிரியருக்கு 5 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்து கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வகாப்தீன் திங்கட்கிழமை (18) தீர்ப்பளித்தார்.

மேலும், மோட்டார் சைக்கிள் செலுத்திச் சென்ற இரு சிறுவர்களையும் நீதவான் கடுமையாக எச்சரிக்கை செய்து விடுவித்தார்.

கிளிநொச்சி பரந்தன் பகுதியில் திங்கட்கிழமை (18) மோட்டார் சைக்கிள் செலுத்திச் சென்று இரண்டு சிறுவர்களும் கிளிநொச்சிப் போக்குவரத்துப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

தொடர்ந்து, மேற்படி மோட்டார் சைக்கிளின் உரிமையாளாருக்கு எதிராக கிளிநொச்சி நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இதன்போதே நீதவான் மேற்படி உத்தரவைப் பிறப்பித்தார்.

Related Posts