Ad Widget

சிகிச்­சைக்காக அனுமதிக்கப்பட்ட நோயளியிடமிருந்து ஹெரோ­யின் மீட்பு

தெல்­லி­ப்பழை வைத்தியசாலையில் சிகிச்­சைக்காகச் சேர்க்­கப்­பட்­டுள்ள நோயாளி ஒரு­வ­ரி­டமிருந்து ஹெரோ­யின் போதைப் பொருள் மீட்­கப்­பட்­டுள்­ளதாக தெரி­விக்­கப்­பட்­டது.

போதைப் பொருள் பாவ­னை­யால் பாதிக்­கப்­பட்ட குடும்­பத் தலை­வர் ஒரு­வரை அதி­லி­ருந்து மீட்­ப­தற்­காக தெல்­லிப்­பழை வைத்தியசாலையில் சேர்க்­கப்­பட்­டி­ருந்­தார்.

அவ­ருக்கு சிகிச்சை அளிக்­கப்­பட்டு வந்த நிலை­யில் நேற்­று­முன்­தி­னம் அவ­ரி­டம் இருந்து சிறிய பொதி ஒன்று இருந்­துள்­ளது. அது என்­ன­வென்று அரு­கில் இருந்­த­வர்­கள் கேட்­ட­போது ஹெரோ­யின் என்று கூறி­ய­து­டன், அதைக் காண்­பித்­தும் உள்­ளார்.

இது தொடர்­பா­கப் பொலி­ஸா­ருக்கு இர­க­சி­ய­மா­கத் தக­வல் வழங்­கப்­பட்­டதை அடுத்து பொலி­ஸார் சம்­பவ இடத்­துக்­குச் சென்று விசா­ர­ணை­களை மேற்­கொண்­ட­னர்.

அவ­ரி­டம் இருந்து சிறிய 3 பொதி­க­ளில் ஹெரோ­யின் போதைப் பொருள் மீட்­கப்­பட்­டுள்­ளது. அதை­ய­டுத்து அந்த நப­ரும் பொலி­ஸா­ரால் கைது செய்­யப்­பட்­டார் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

Related Posts