நாட்டில் புதிய கோவிட்-19 வைரஸ் வகைகள் சமூகத்தில் கண்டறியப்படாமல் இருக்கக்கூடும் என்று சுகாதார அதிகாரிகள் இன்று எச்சரித்தனர்.
புதிய மாறுபாடுகளைக் கொண்ட நபர்கள் சமூகத்தில் இருக்க வாய்ப்பு உள்ளது என்று சுகாதார அமைச்சின் தலைமை தொற்றுநோயியல் பணிப்பாளர், மருத்துவ வல்லுநர் சுதத் சமரவீர தெரிவித்தார்.
இன்று ஒரு இணைய ஊடக மாநாட்டில் பேசிய அவர் தெரிவித்ததாவது;
இலங்கைக்கு வருபவர்கள் அனைவருக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. மேலதிக ஆய்வுகளுக்கு மாதிரிகள் எடுக்கப்படுகின்றன.
மேலும் பரிசோதனைகள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையத்தில் இருந்த ஒரு நபரில் கோரோனா வைரஸின் இந்திய மாறுபாட்டைக் கண்டறிய வழிவகுத்தன.
இருப்பினும், ஆரம்ப கட்டங்களில் புதிய மாறுபாட்டைக் கண்டறியாதவர்கள் இப்போது சமூகத்துடன் நடமாடுவதற்கான வாய்ப்பு உள்ளது – என்றார்.