Ad Widget

கோண்டாவில் கொலை: சகோதரர்கள் இருவருக்கும் தொடர்ந்தும் மறியல்

judgement_court_pinaiகோண்டாவில் வாள்வெட்டில் இறந்த சுகிர்தனின் சகோதர்கள் இருவரையும் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோண்டாவிலைச் சேர்ந்த ரவீந்திரன் சுகிர்தன் உரும்பிராயைச் சேர்ந்த குழு ஒன்றினால் கடந்த 16ஆம் திகதி வீட்டில் வைத்து வெட்டிக் கொலை செய்யப்பட்டிருந்தார்.

இதனையடுத்து சுகிர்தனின் சகோதர்களான செந்தூரன் மற்றும் யதுர்சன் ஆகியோர் உரும்பிராயைச் சேர்ந்தவர்களை தாக்கியுள்ளதுடன் அவர்களது வீடுகளுக்கும் சென்று பொருட்களை அடித்து சேதமாக்கினர் என்ற சந்தேகத்தின் பேரில் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

குறித்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. எனினும் நேற்றய தினம் பதில் நீதவான் சறோஜினி இளங்கோவன் கடமைவகித்தமையினால் குறித்த இருவரையும் யூலை 10 வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Related Posts