கொழும்பு – புத்தளம் பிரதான வீதியின் கலா ஓயா பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.
இரண்டு தனியார் பேருந்துகள் இன்று(வியாழக்கிழமை) நேருக்கு நேர் மோதிக்கொண்டதனாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
கொழும்பிலிருந்து மன்னார் நோக்கி பயணித்த பேருந்து ஒன்றும் அநுராதபுரத்திலிருந்து கலா ஓயா நோக்கி பயணித்த பேருந்து ஒன்றுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்கள் அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களில் ஒருவரின் நிலமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து தொடர்பாக இராஜாங்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.