Ad Widget

கூட்டமைப்பின் அறிக்கையினால் அரசு மகிழ்ச்சி!

மாகாணசபை தேர்தலை விரைவில் நடத்த வேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கையினால் தான் மிகவும் மகிழ்ச்சியடைவதாக கல்வியமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஏனெனில், கடந்த அரசாங்கத்தில் மாகாணசபை தேர்தல் நடத்தப்படாமல் தள்ளிவைக்கப்பட்டதில் தமிழ் தேசிய கூட்டமைப்பும் தொடர்புபட்டிருந்தது என கூறினார்.

முன்னாள் அரசாங்கத்தினால் தாக்கல் செய்யப்பட்டு தவறாக அங்கீகரிக்கப்பட்ட சட்டமூலம் காரணமாக மாகாணசபை தேர்தலை நடத்த முடியவில்லையௌ பீரிஸ் குறிப்பிட்டார்.

பழைய தேர்தல் முறையை ஒழித்த அந்த சட்ட வரைபு, புதிய தேர்தல் முறைமையொன்றை அங்கீகரிக்க தவறியதாக குற்றம்சாட்டினார்.

தேவையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டு, ஆறு மாதங்களிற்குள் மாகாணசபை தேர்தலை நடத்த முடியுமென்றும் அரசாங்கம நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

Related Posts