கீரிமலையில் பிதிர்க்கடன் கழிப்பதற்கு சுமார் பல்லாயிரக்கணக்கானோர் இன்று சனிக்கிழமை திரண்டு பெற்றோர்களுக்கான பிதிர்க் கடன்களைக் கழித்தனர்.
அதிகாலை முதல் கீரிமலையில் கூடிய மக்கள் கீரிமலை கடற்கரையில் விசேடமாக அமைக்கப்பட்ட பிதிர்க்கடன் சாலைகளில் தானம் கொடுத்து தமது பெற்றோர்களை நினைந்து பிதிர் கடன்களை நிறைவேற்றினர்.
கீரிமலை கேணியிலும் கடலிலும் புனித நீராடி இன்று பிதிர்க்கடன் தீர்த்தனர்.