Ad Widget

கிட்டுவை பயன்படுத்தி தேர்தல் பிரச்சாரம் செய்ததா கூட்டமைப்பு?

வடக்கில் தேர்தல் நடவடிக்கைகளுக்காக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடைய விடயங்களைப் பயன்படுத்த வேண்டாம் என, அனைத்து தரப்பினருக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில், முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் குழுவொன்று, முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கியஸ்தரான கிட்டுவின் 25வது நினைவு தினத்தை அனுஷ்டித்து அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக, தெரியவந்துள்ளது.

இதில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இது இவ்வாறு இருக்க, அங்கிருந்த சிறுவன் ஒருவர், கிட்டுவின் புகைப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியதாகவும், இது தேர்தல் நடவடிக்கைகளுக்கு புலிகளுடன் தொடர்புடைய விடயங்களை பயன்படுத்துவதை காட்டிலும் பாரதூரமானது எனவும், முல்லைத்தீவுப் பகுதியிலுள்ள பாதுகாப்பு பிரிவினர் கூறியுள்ளனர்.

மேலும், இங்கு உரையாற்றிய கூட்டமைப்பின் வேட்பாளர், கடந்த 25 வருடங்களுக்கு முன் மரணித்த கிட்டு உள்ளிட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர்கள் எதிர்பார்த்த படி, தமிழ் மக்களின் உரிமைகள் மற்றும் அவர்களது விடுதலையை வென்றெடுக்க, தமிழ் தேசியக் கூட்டமைப்பு அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

எனவே, வடக்கில் கூட்டமைப்பை பலப்படுத்த மக்கள் அனைவரும் முடிவெடுக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Posts