Ad Widget

காரைநகர் பிரதேச சபை உறுப்பினர் தாக்கப்பட்டமையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்!

காரைநகர் பிரதேச உறுப்பினர் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று இன்று வலந்தலை சந்தியில் இடம்பெற்றது.

காரைநகர் பிரதேச சபையின் சுயேட்சைக் குழு உறுப்பினர் நல்லையா ஜெயகிஸ்ணா, சட்டத்துக்குப் புறம்பாக அனுமதிப்பத்திரமின்றி மாடு ஒன்றைக் கொண்டு சென்ற ஒருவரைத் தாக்க முற்பட்டவர்களைத் தடுத்துள்ளார். மாட்டைக் கொண்டு சென்றவரைத் தாக்கவேண்டாம் என்றும் அவரைப் பொலிஸில் ஒப்படைக்க ஒத்துழைக்குமாறும் பிரதேச சபை உறுப்பினர் கேட்டுள்ளார்.

அதனால் மாட்டைக் கொண்டு சென்றவரைத் தாக்குவதைத் தடுத்த பிரதேச சபை உறுப்பினரை அவர்கள் தாக்கினர். இந்தச் சம்பவம் நேற்று இடம்பெற்றது.

இந்த நிலையிலேயே காரைநகர் பிரதேச சபையின் சுயேட்சைக் குழு உறுப்பினர் நல்லையா ஜெயகிஸ்ணா தாக்கப்பட்டதைக் கண்டித்தும் அவரைத் தாக்கியவர்களைக் கைது செய்யவேண்டும் எனவும் வலியுறுத்தி மக்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வலந்தலைச் சந்தியில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்று அங்கிருந்து பேரணியாக பிரதேச சபை வாயிலைச் சென்றடைந்த போராட்டக்காரர்கள், தமது கோரிக்கை அடங்கிய மனுவை பிரதேச சபைச் செயலாளரிடம் கையளித்தனர்.

Related Posts