கடந்த காலங்களில் காணாமல் போன 35 தமிழர்களின் உடல்கள் மட்டக்களப்பு பகுதியில் புதைக்கப்பட்டுள்ளதாக தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு கல்லடியில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து இதனை அவர் கூறியுள்ளார்.
இந்த தகவலை கிழக்கு மாகாண இராணுவக் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் கே.பி.ஏ.ஜயசேகர ஊடாக இராணுவத் தளபத்திக்கு அனுப்பியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.