Ad Widget

காணாமல் போனவர்களின் உறவினர்களினால் வவுனியாவில் ஆர்ப்பாட்டம்!

காணாமல் போனவர்களின் உறவினர்களினால் வவுனியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று(புதன்கிழமை) சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றிருந்தது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களினால் ‘எங்கே எங்கே உறவுகள் எங்கே“, “கையில் ஒப்படைக்கப்பட்ட உறவுகள் எங்கே“ என்று கோசங்களை எழுப்பியவாறும் பதாதைகளை தாங்கியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts