முகமாலைப் பகுதியில் கண்ணிவெடியில் சிக்கி நபரொருவர் படுகாயமடைந்துள்ளார். கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த துணுக்காய் ஆரோக்கியபுரத்தைச் சேர்ந்த மகாலிங்கம் நகுலேஸ்வரன் (வயது 35) என்பவரே சம்பவத்தில் படுகாயமடைந்தவராவார்.
நேற்று காலை 10.45 மணியளவில் வழமைபோன்று முகமாலைப் பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தபோது தவறுதலாக வெடித்ததில் இவர் காயமடைந்துள்ளார்.
இவர் ஹலோ ட்ரஸ்ட் என்ற நிறுவனத்தின் பணியாளராக தெரிய வந்துள்ளது. மேலும் குறித்த நபர் உடனடியாக சாவகச்சேரி வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.