Ad Widget

ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்பு – 7 பெண்கள் உட்பட 54 பேர் அதிரடியாக கைது!

ஈஸ்டர் தாக்குதலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட நாடளாவிய சுற்றிவளைப்பு நடவடிக்கையில் இதுவரை தாக்குதலுடன் தொடர்புடைய 54 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 7 பெண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் தற்போது பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

அத்தோடு 19 சந்தேகநபர்களிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related Posts