Ad Widget

இலங்கை பெண் ஓமானில் தலை துண்டிக்கப்பட்டு கொலை

ஓமானுக்கு பணிப்பெண்ணாக சென்ற இலங்கை பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த 16 ஆம் திகதி குறித்த பெண் இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தவறான உறவு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தில் வினவிய போது,

குறித்த பெண் பதிவு செய்யப்படாமல் வெளிநாடு சென்றுள்ளதாக சந்தேகிப்பதாகவும் பதிவு செய்யப்பட்டிருந்தால் ஏற்கனவே இந்த சம்பவம் தொடர்பாக தூதரகம் மூலம் இலங்கைக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

எனினும் குறித்த சம்பவம் தொடர்பாக உடனடியாக விசாரணை செய்யுமாறு ஓமானுக்கான இலங்கை தூதரகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts