Ad Widget

இலங்கையில் 3 மாத குழந்தை உட்பட மேலும் 26 உயிரிழப்புகள் பதிவு – ஒரேநாளில் 2 ஆயிரத்து 624 பேருக்கு தொற்று!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 26 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

காலி, ஹெட்டிபொல, பல்லேவெல, கண்டி, மத்துகம, பாதுக்கை, மீகஹகொடை, அக்குரஸ்ஸ, மொரான்துடுவை, அநுராதபுரம், கொழும்பு-6, கலுஹக்கல, மொரட்டுவை, மல்வானை, கொழும்பு 15, பொரளை, கந்தானை, மாஸ்வெல, வத்தேகம, மாலபே ஆகிய பகுதிகளிலும் யாழ்ப்பாணம், களுத்துறை மற்றும் நேபடை ஆகிய பிரதேசங்களில் தலா இரண்டு கொரோனா மரணங்களும் பதிவாகியுள்ளன.

14 ஆண்களும் 11 பெண்களும், 3 மாத குழந்தையொன்றும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிழிழந்தவர்களின் எண்ணிக்கை 827ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 2 ஆயிரத்து 624 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 28 ஆயிரத்து 530 ஆக அதிகரித்துள்ளது.

அவர்களில் ஒரு இலட்சத்து 5 ஆயிரத்து 611 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், தொற்றுக்கு உள்ளான 22 ஆயிரத்து 92 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

Related Posts