Ad Widget

இலங்கையில் முதன்முதலாக கொரோனா தொற்றினால் கர்ப்பிணித் தாயின் மரணம் பதிவு!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் முதன்முதலாகக் கர்ப்பிணித் தாயொருவரின் மரணம் பதிவாகியுள்ளது.

ராகம பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய கர்ப்பிணித் தாயொருவரே இவ்வாறு நேற்று உயிரிழந்துள்ளதாக ராகம சுகாதார மருத்துவ பிரிவினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றினால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 720ஆகப் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts