இணுவில் சந்தியில் இன்று திங்கட்கிழமை (30) இடம்பெற்ற விபத்தொன்றில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ் நோக்கிச் சென்றுகொண்டிருந்த சிற்றூர்தி வண்டியொன்றுடன் மோட்டார் சைக்கிளொன்று நேருக்கு நேர் மோதியதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தின் போது மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்த மல்லாகத்தினைச் சேர்ந்த வி.சுதாகரன் (வயது 32) என்பவரே படுகாயமடைந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தாம் மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.