Ad Widget

இணுவில் – கலாஜோதி கிராமம் தனிமைப்படுத்தப்பட்டது!!

யாழ்ப்பாணத்தில் மேலும் ஒரு கிராம அலுவலர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ்.மாவட்டத்தில் ஏற்கனவே அதிகளவில் தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட மூன்று கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில், உடுவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இணுவில் கிராமத்தில் ஜே190 கலாஜோதி கிராம சேவகர் பிரிவில் அதிகளவில் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக இணுவில் கிராமத்தின் ஒரு பகுதியினை நேற்று இரவு முதல் தனிமைப்படுத்துமாறு சுகாதாரப் பிரிவினரால் சிபார்சு செய்யப்பட்டு யாழ்ப்பாண மாவட்ட கொரோனா ஒழிப்பு செயலணியின் அனுமதிக்காக விண்ணப்பிக்கப்பட்டுள்ளமைக்கு அமைய தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

Related Posts