முகாமைத்துவ பெண்கள் அமைப்பால் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின் மூலம் ஆளுமை மிக்க பெண் என்கிற உயரிய விருதை பெற்று உள்ளார் யாழ். மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா.
கொழும்பில் தாஜ் சமுத்திரா ஹோட்டலில் இடம்பெற்ற விழாவில் வைத்து இவருக்கான விருது வழங்கப்பட்டது.
இவ்விழாவுக்கு பிரதம விருந்தினராக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ அழைக்கப்பட்டு இருந்தார்.