Ad Widget

ஆணொருவரின் சடலம் கரையொதுங்கியது

dead-footதும்பளை கிழக்கு (மூர்க்கம்) கடற்கரையிலிருந்து ஆணொருவரின் சடலம் இன்று செவ்வாய்க்கிழமை (24) அதிகாலை கரையொதுங்கியுள்ளதாக பருத்தித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.

தும்பளையினைச் சேர்ந்த முருகேசுப்பிள்ளை நிமல்ராஜ் (28) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

அதிகாலை வேளையில் தொழிலுக்குச் சென்றவர்கள் கடற்கரையில் சடலமொன்று கரையொதுங்கியிருப்பதாக தகவல் தெரிவித்தமையினையடுத்தே குறித்த சடலம் மீட்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகப் பொலிஸார் மேலும் கூறினார்கள்.

Related Posts