Ad Widget

பொலிஸ் தகவல் வலையமைப்பு மீது வைரஸ் தாக்குதல்!!

பொலிஸ் நிலையங்களுக்கு இடையில் இலத்திரனியல் தகவல் பரிமாற்றங்களுக்கு பயன்படுத்தப்படும் மெய்நிகர் தகவல் வலையமைப்பு (VPN network) மீது வைரஸ் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

இலங்கைப் பொலிஸ் விபிஎன் வலையமைப்பு வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகிய போதும் நிலமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த வைரஸ் தாக்குதல் தொடர்பாக பொலிஸ் தொழில்நுட்ப பிரிவு விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த தாக்குதலினால், வைரஸ் பாதுகாப்புடன் இருந்த கணினி வலையமைப்பு பாதிக்கப்படவில்லை” என்றும், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

Related Posts