Ad Widget

யாழ்ப்பாணத்தில் முஸ்லிம் மக்கள் ஆர்ப்பாட்டம்!

யாழ்ப்பாணம் முஸ்லிம் கல்லூரி வீதியும் – நாவலர் வீதியும் இணையும் புதுப்பள்ளிச் சந்தியில் முஸ்லிம்களின் வெள்ளிக்கிழமை ஆராதனையின் பின்னர் யாழ் முஸ்லீம் சமூகத்தினால் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

குறித்த ஆர்ப்பாட்டமானது யாழ் முஸ்லிம் சமூகத்தினால் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பிற்கு எதிர்ப்புத்தெரிவிக்கும் வகையிலும், அவ் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட ஏப்ரல் 21 தாக்குதலுக்கும் கண்டனம் வெளியிட்டு குறித்த தாக்குதலில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் அதே சமயம் குறித்த நடவடிக்கைகளில் ஈடுபட்ட அனைவர் மீதும் அரசை சட்டத்தின் மூலம் தண்டணையை வழங்கக் கோரியும் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த ஆர்ப்படடத்தில் ஈடுபடடவர்கள் நாட்டில் தற்போது உருவாகியுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதம் முற்றாக அழிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.மேலும் நாட்டில் நடைபெற்ற குண்டு தாக்குதல்கள் சம்பவங்களுடன் தொடர்புடைய அனைவரும் சடடத்தின் முன் நிறுத்தப்பட்டு அவர்களுக்கு அதிக பட்ஷ தண்டனை வழங்கப்பட வேண்டும் என கோரினர்.

Related Posts