பிரித்தானியாவில் வாழும் இலங்கையர்கள் உள்ளிட்ட அனைத்து இலங்கை மக்களுக்கும் தமிழ், சிங்கள புத்தாண்டு வாழ்த்து தெரிவிப்பதாக பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார்.
இலட்சக்கணக்கான மக்கள் புத்தாண்டு பிறப்பை கொண்டாடும் வகையில் அவர்களின் அனைத்து உறவினர்களையும் சந்தித்துக் கொள்வதன் பெறுமதியை தான் அறிந்து கொண்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இலங்கையில் மனித உரிமையை உறுதிப்படுத்துவதற்கும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும் வழங்கும் ஒத்துழைப்பை மேலும் அதிகரிப்பதாக பிரதமர் கமரூன் தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தின் கீழ் அந்த துறைகளில் தற்போது அடைந்திருக்கும் குறிப்பிடத்தக்க விருத்தியை தான் அறிந்து கொண்டிருப்பதாக தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் பிரித்தானிய பிரதமர் கமரூன் தெரிவித்துள்ளார்.