சுன்னாகம் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு எதிரே இடம்பெற்ற விபத்துச்சம்பவமொன்றில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளொன்றை கன்டர் ரக வாகனமொன்று மோதியதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பிரயாணித்த சுன்னாகத்தினைச் சேர்ந்த றீடன் அமலதாஸ் றெக்னோ (23) என்பவரே படுகாயமடைந்துள்ளார்.
படுகாயமடைந்த இளைஞனுடன் பயணித்த தாயாருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தாம் மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.