Ad Widget

முகமாலையில் எலும்புக்கூடு மீட்பு

யாழ். முகமாலைப் பகுதியில் எலும்புக்கூடொன்று இன்று புதன்கிழமை (02) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பளைப் பொலிஸார் தெரிவித்தனர்.

ittavil-elumbukkudu

கலோரெஸ்ட் நிறுவனத்தின், மிதிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டுவரும் பணியாளர்கள், கைவிடப்பட்ட காவலரண் அமைந்திருந்த பகுதியில் பணிகளை மேற்கொள்ளும் போதே மேற்படி எலும்புக்கூடு இருப்பதை அவதானித்து தமக்குத் தெரிவித்ததாக பளைப் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்வில் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

யுத்தத்தின் போது சண்டை இடம்பெற்ற பகுதியிலேயே மேற்படி எலும்புக்கூடு மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts