மணற்காடு மணல் அள்ளும் பகுதியிலிருந்து 82 மில்லிமீற்றர் மோட்டார் ஷெல்கள் 12, அதற்குரிய வெடிப்பி (ஸ்ரார்ட்டர்) 12 என்பன நேற்று (01) விசேட அதிரடிப் படையினரால் மீட்கப்பட்டு தம்மிடம் ஒப்படைக்கப்பட்டதாக பருத்தித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த ஷெல்களை இராணுவத்தினரின் குண்டு செயலிழக்கும் பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளதாக பொலிஸார் ஒப்படைத்துள்ளனர்.
ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் மகேஸ்வரி நிதியத்தால் மணல் அள்ளும் மேற்படி இடத்தில் மோட்டார் ஷெல்கள் இருப்பதாக பொதுமக்கள் விசேட அதிரடிப் படையினருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் விசேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.