தொண்டைமனாறு பகுதியினைச் சேர்ந்த சிவபாதசுந்தரம் ஜெயசுந்தரம் (55) என்பவரைக் காணவில்லையென அவரது மனைவி நேற்று வியாழக்கிழமை (19) முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக வல்வெட்டித்துறை குற்ற ஒழிப்புப் பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்.நகரிற்கு பொருட்கள் வாங்குவதற்காக கடந்த செவ்வாய்க்கிழமை (17) வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் சென்றவர் இதுவரையிலும் வீடு திரும்பவில்லையென மனைவி தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வல்வெட்டித்துறைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.