தமிழக சட்டசபையின் இன்றைய கூட்டத்தில் நீர்வளத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. சுற்றுலா – கலை மற்றும் பண்பாட்டுத்துறை ஆகிய துறைகள் மீதான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

இந்த விவாதத்தின் போது திமுக எம்.எல்.ஏ. ஐ.பெரியசாமி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை குறித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்தார். அதற்கு அத்துறை அமைச்சர் என்.ஆனந்த் பதில்களை அளித்தார். இதற்கிடையில் திமுக மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இருக்கிறதா? என திமுக எம்.எல்.ஏ. கேள்வி எழுப்பினார்.
இதற்கு சட்டென்று எழுந்து முதலமைச்சர் விஜய் பேசினார். அப்போது அவர் பேசியதாவது,
இதை நான் சொல்ல வேண்டாம் என்றுதான் நினைத்தேன், ஆனால் எதிர்க்கட்சியினர் ஆதாரம்… ஆதாரம் என்று கேட்கிறார்கள், ஒரு வாரத்திற்கு முன்பு நிதி அமைச்சர் பேசும்போது 3 துறைகள் குறித்து ஆய்வு செய்த கோப்புகள் எனது மேசையில் இருப்பதாக தெரிவித்தார்.
அதை ஒன்றும் நிதி அமைச்சர் போற போக்கில் சொல்லவில்லை, உண்மையிலேயே அந்த கோப்புகள் எனது மேசையில் தான் இருக்கிறது. அத்தனையும் ஆதாரத்துடன் இருக்கிறது, ஓபன் பன்ன வச்சிராதீங்க, எதை எப்போ வெளியிட வேண்டுமோ, அப்போது அனைத்தும் சரியாக வெளியிடப்படும்.
மக்களிடம் எப்போது பேச வேண்டும், எண்ண பேசனும், எப்படி பேசனும் என்று பேசிவிட்டுதான் எங்களை அன்பாக, ஆசையாக இங்கே (சட்டசபைக்குள்) கொண்டு வந்து உட்கார வைத்துள்ளார்கள். நான் பேசுவேன். பேசக்கூடாது என்றெல்லாம் இல்லை, இடைத்தேர்தலிலாவது சில பேருக்கு நல்லது நடக்கணும்ல, இவ்வாறு அவர் கூறினார்.