Ad Widget

முல்லைத்தீவில் கோர விபத்து – 6 பேர் காயம்!

அரச பேருந்தும் இராணுவத்தினரின் வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று (12) மாலை 4.30 மணியளவில் A9 வீதியில் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொக்காவில் பகுதியில் குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. துணுக்காயிலிருந்து காரைநகர் நோக்கி பயணித்த அரச பேருந்து எதிரே பயணித்த...

யாழ் மரக்கறிகளின் வரவால் தம்புள்ளையில் ஏற்பட்ட விலை மாற்றம்!

யாழ்ப்பாணத்தில் உற்பத்தி செய்யப்பட்ட மரக்கறிகள் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டதை தொடர்ந்து மரக்கறிகளின் விலைகள் சடுதியாக குறைவடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். யாழ்ப்பாணம் – சுன்னாகம் பிரதேசத்தில் பயிரிடப்பட்டிருந்த கரட், பச்சை மிளகாய் மற்றும் உருளைகிழங்கு என்பன தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இதனால், கடந்த காலத்தில் அதிக விலையில் விற்பனை செய்யப்பட்டிருந்த...
Ad Widget

பலாலி கிழக்கில் சில காணிகளை விடுவிக்க முனைப்பு – சிவபாலசுந்தரன்

யாழ்ப்பாணம் பலாலி கிழக்குப் பகுதியில் உயர் பாதுகாப்பு வலயமாகக் காணப்படும் காணிகளில் சில காணிகளை விடுவிக்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக யாழ். மாவட்ட செயலர் அ.சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார். பலாலி கிழக்கில் ஒரு தொகுதி காணியை விடுவிக்க ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் , தற்போது சம்பந்தப்பட்ட தரப்புக்களுடன் கடித பரிமாற்றங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. விரைவில் கொழும்பிலிருந்து...

இலங்கையில் கையடக்கத் தொலைபேசி பயன்படுத்துவோருக்கு முக்கிய அறிவிப்பு

கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்தும் ஒவ்வொரு வாடிக்கையாளரும் தமது சிம் அட்டையை முறையாகப் பதிவு செய்ய வேண்டும் என இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் பணிப்பாளர் மேனகா பதிரண தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், நீங்கள் தற்போது பயன்படுத்தாத தொலைபேசி நிறுவனங்களில், உங்கள் பெயரில் உள்ள...

வலிகாமம் வடக்கில் முறியடிக்கப்பட்ட காணி அபகறிப்பு முயற்சி!!

வலிகாமம் வடக்கில் மக்களின் காணிகளை சுவீகரிக்க எடுக்கப்பட்ட முயற்சி அந்தப் பகுதி மக்களால் முறியடிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியிலிருந்து, 500 ஏக்கர் அளவிலான காணியை சுவீகரிக்க முயற்சி எடுக்கப்பட்ட நிலையிலேயே மக்கள் நேற்றையதினம் (12.02.2024) அதை முறியடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய அபிவிருத்தி என்னும் பெயரில், 500 ஏக்கர் நிலத்தை சுவீகரித்துத் தருமாறு விமான...

வெப்ப அதிர்ச்சியால் குழந்தைகள் உயிரிழக்க நேரிடும்: விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!!

தற்போது நிலவும் வறண்ட காலநிலை காரணமாக நாடளாவிய ரீதியில் தோல் நோய்கள் பரவி வருவதாகவும், இந்த நிலைமை குழந்தைகளுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் சிறுவர் வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா குறிப்பிட்டுள்ளார். பகல் வேளையில் குழந்தைகள் விளையாடும் போது அதற்கு உகந்த இடத்தை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார். மேலும், குழந்தைகளை தண்ணீர்...

நாடளாவிய ரீதியில் காற்றின் தரம் குறித்து விசேட எச்சரிக்கை!

நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலைக்கு சரிந்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அண்மைய மதிப்பீட்டின்படி, நுவரெலியாவைத் தவிர, ஏனைய அனைத்து மாவட்டங்களும் ஆரோக்கியமற்ற காற்று நிலைமைகள் காணப்படுவதாக அமெரிக்காவின் காற்றுத் தரக் குறியீட்டின் தரவுகளை மேற்கோள் காட்டி, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக...

யாழில் வாள்வெட்டுத் தாக்குதல்களால் 13 பேர் உயிரிழப்பு!

“யாழ் போதனா வைத்திய சாலையில் கடந்த வருடம் மாத்திரம் வாள்வெட்டுத் தாக்குதலுக்கு இலக்காகி 13 பேர் உயிரிழந்துள்ளனர்” என வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”வாள் , வெட்டு மற்றும் தாக்குதல்களுக்கு இலக்காகி கடந்த வருடம் 983 பேர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.அவர்களில் 13 பேர்...

பிரதேசவாதத்திற்குத் துணைபோக மாட்டோம் : தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுதி!

சிங்கள தேசத்தில் கரைந்து செல்லும் கிழக்கைப் பாதுகாக்க கிழக்குடன் வடக்கு இணைக்கப்பட வேண்டும் என்பதில் மக்கள் விழிப்படைய வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார். மட்டக்களப்பு கல்லடியிலுள்ள ஊடக கற்கை வளநிலையத்தில் இடம்பெற்ற ஊடக மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,...

யாழில் தவறான முடிவெடுத்து அபிவிருத்தி உத்தியோகத்தர் உயிர்மாய்ப்பு!!

யாழ்ப்பாணம் - சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் கலாச்சார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று(11.02.2024) இடம்பெற்றுள்ளது. இதன்போது டச்சு வீதி மூளாய், சுழிபுரம் பகுதியை சேர்ந்த 49 வயதுடைய பேரம்பலம் புனிதா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் கடமை புரிந்து வரும் நிலையில் இவருக்கு...

இலங்கை வாழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்!!

நாட்டில் நிலவி வரும் கடும் வெப்பநிலையுடனான காலநிலை காரணமாக அதிகளவு நீர் பருகுமாறு மக்களுக்கு சர்வதேச சுகாதார ஆய்வு நிறுவனத்தின் போசாக்கு பிரிவு பிரதானி வைத்தியர் ரேணுகா ஜயதிஸ்ஸ அறிவுறுத்தல் விடுத்துள்ளார். மேலும், வயது வந்தவர்கள் மூன்றரை லீட்டர் நீரும் சிறுவர்கள் ஒன்றரை லீட்டர் நீரும் நாளொன்றுக்கு பருக வேண்டுமென அறிவுறுத்தியுள்ளார். இந்நிலையில் தேசிக்காய் சாறு,...

கடந்த வருடத்தில் யாழ் போதனா வைத்தியசாலையில் மட்டும் 76 பேர் விபத்தினால் பலி!!

கடந்த 2023ஆம் ஆண்டு, விபத்துக்கு உள்ளாகி சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்டவர்களில் 76 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். கடந்த வருடம் விபத்துக்களில் சிக்கிய நிலையில் ஆயிரத்து 559 பேர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 76 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் என அவர் தெரிவித்தார்.

யாழில் பேருந்தில் பெண்களிடம் சில்மிஷம் – இருவர் கைது

யாழ்ப்பாணத்தில் பேருந்தில் பெண்களிடம் தவறாக நடந்து கொண்ட குற்றச்சாட்டில் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்கள் இருவரும் அராலி பகுதியை சேர்ந்த 22 மற்றும் 24 வயதுடைய இளைஞர்கள் என பொலிஸார் தெரிவித்தனர் . யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்ட பஸ்ஸில் சாதாரண உடையில் இருந்த பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் குறித்த இருவரும்...

ஐந்து அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி மீனவர்கள் கவனயீர்ப்பு பேரணி

ஐந்து அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு கோரி மீனவர்கள் இன்று (09) யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு பேரணியில் ஈடுபட்டுள்ளனர். யாழ்ப்பாண மாவட்ட செயலகத்துக்கு முன் ஆரம்பமான இந்த பேரணி வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் வரை சென்றது. பின்னர், ஆளுநர் ஊடாக ஜனாதிபதியிடம் கையளிப்பதற்கு ஐந்து அம்சக் கோரிக்கைகள் அடங்கிய மகஜரொன்று ஆளுநரின் பிரதிச் செயலாளரிடம் கையளிக்கப்பட்டது. அந்த...

யாழ் பல்கலைக் கழகத்தின் பொதுப் பட்டமளிப்பு விழா மார்ச்சில்!!

யாழ் பல்கலைக் கழகத்தின் 38ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவானது, எதிர்வரும் மார்ச் மாதம் 14ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற தகுதியான மாணவர்களின் விபரங்கள் யாழ் பல்கலைக்கழக இணையத்தளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

யாழில் 106 பேருக்கு காணி உறுதிப்பத்திரம் வழங்கிவைப்பு!

தேசிய வீடமைப்பு அதிகார சபையினால், யாழ் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 106 பயனாளிகளுக்கு இன்று யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் காணி உறுதிப்பத்திரம் வழங்கி வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது மேலதிகமாக 20 பயனாளிகளுக்கு வீடமைப்பு கடனுக்கான முதற்கட்ட காசோலையும் வழங்கி வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில், தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலைவர் ரஜீவ் சூரியாராச்சி, உப...

தென்னிந்திய பிரபலங்களை முற்றுகையிடுவோம்!

யாழுக்கு வருகை தந்துள்ள தென்னிந்திய பிரபலங்களுடன், புகைப்படம் எடுத்துக்கொள்வதற்கு பணம் அறவிடப்பட்டால் அவர்கள் தங்கியுள்ள விடுதிகளை முற்றுகையிடுவோம் என அடக்குமுறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் மு.தம்பிராசா எச்சரித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார். பிரபல தென்னிந்திய பாடகர் ஹரிகரனின் இசை நிகழ்ச்சியை முன்னிட்டு...

சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய 10 உணவகங்களுக்கு எதிராக நடவடிக்கை!!

சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட உணவகங்களில் பொதுச்சுகாதாரப் பரிசோதகர்கள் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் 12 உணவகங்கள் மீது வழக்குத்தாக்கல் மேற்கொள்ளப்பட்டது. பண்டத்தரிப்பு பொதுச் சுகாதாரப்பரிசோசகர் ஆர்.ஜே.பிரகலாதன் 3 பேருக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்து 69000 ரூபா தண்டப்பணம் செலுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதேவேளை ஆனைக்கோட்டை பொதுச்சுகாதாரப் பரிசோதகர் கு.பாலேந்திரகுமார் 09 உணவகங்களுக்கு எதிராக தாக்கல்...

இலங்கையில் மீண்டும் மின்சார நெருக்கடி ஏற்படும் அபாயம்!!

நாட்டில் மீண்டும் மின்சார நெருக்கடி ஏற்படும் என இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் நரேந்திர சில்வா தெரிவித்துள்ளார். புதுப்பிக்கத்தக்க மின் நிலைய திட்டங்கள் தொடர்பில் முன்வைக்கப்பட்ட யோசனைகளை நடைமுறைப்படுத்தப்படா விட்டால், இந்த நிலைமை ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். வங்குரோத்து நிலைமைகளுக்கான காரணங்களை ஆராய்ந்து நாடாளுமன்றத்தில் அறிக்கை சமர்பிப்பதற்காக மின்சார சபையின் அதிகாரிகள் நாடாளுமன்ற...

பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் மீது தாக்குதல்!

சாவகச்சேரி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் மீது திருட்டுக் கும்பலொன்று தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாவகச்சேரி மந்துவில் பகுதியில் கும்பலொன்று வீதியில் பொருத்தப்பட்டிருந்த மின் குமிழ்களைத் திருடிக்கொண்டிருப்பதை அவதானித்த அப்பகுதி மக்கள் இது குறித்து சாவகச்சேரி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் கு. குகானந்தனுக்கு தெரியப்படுத்தியுள்ளனர். இதனையடுத்து அங்கு வந்த குகானந்தன்...
Loading posts...

All posts loaded

No more posts