Ad Widget

தமிழ்த்தேசிய பேரவை வேட்பாளர்கள் நல்லைக்குருமணிகளிடம் ஆசி பெற்றனர்!

உள்ளூராட்சித் தேர்தலில் அகில இலங்கை தமிழ்க் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசிய பேரவையினர் இன்று (01.01.2018) திங்கட்கிழமை சின்மயாமிஷன் பிரம்மச்சாரிய யாக்கிரத சைதண்யா சுவாமிகள் மற்றும் யாழ் நல்லை ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர பிரம்மச்சாரிய சுவாமிகள் ஆகியோரைச் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுள்ளனர். இன்று காலை 09.30 மணியளவில் யாழ் சின்மயாமிஷன் சுவாமிகள்...

தமிழ் தேசிய பேரவை வேட்பாளர்கள் யாழ் ஆயரிம் ஆசிபெற்றனர்

உள்ளூராட்சித் தேர்தலில் அகில இலங்கை தமிழ்க் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசிய பேரவையினர் தமது தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை ஆரம்பிக்குபொருட்டு இன்று (31.12.2017) ஞாயிற்றுக்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு ஜஸ்ரின் பேர்ணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை மற்றும் யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்திரு ஜெபரட்ணம் ஆடிகளால் ஆகியோரைச் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுள்ளனர். இன்று...
Ad Widget

தமிழர்களை தமிழர்களே ஆள மக்களை அணிதிரட்ட வேண்டும்: த.தே.கூ

தமிழர்களை பெரும்பான்மையாகக் கொண்ட வவுனியா வடக்கு பிரதேச சபையை (நெடுங்கேணி) தமிழ் மக்களாகிய நாமே நிர்வகிக்கக் கூடிய வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு வாக்களிக்க மக்களை அணி திரட்டுமாறு வேட்பாளர்கள்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வவுனியா வடக்கு பிரதேச சபையின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு நெடுங்கேணி நகரில் அமைந்துள்ள கந்தசாமி கோயிலில்...

மாகாணசபை தேர்தல் தொடர்பில் நான் சிந்திக்கவில்லை: வடக்கு முதல்வர்

எதிர்வரும் வடமாகாண சபைத் தேர்தல் பற்றி சிந்திக்கவில்லை என்றும் தமிழ் மக்கள் பேரவையின் கருத்துக்களை ஒத்த கருத்துக்களை உடையவர்களை மதிப்பதாகவும், வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபைத் தேர்தல் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது, ”வடக்கு கிழக்கில் இத்தேர்தல் காலத்தில் என் பெயரை...

முன்னாள் போராளிகளின் உதவியுடன் தேர்தலில் சாதிக்க கூட்டமைப்பு முயற்சி!

முன்னாள் தமிழீழ விடுதலை புலி உறுப்பினர்களின் உதவியுடன் உள்ளூரட்சி மன்றத் தேர்தலை வெற்றிக் கொள்ளும் முயற்சியில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் இறங்கியுள்ளனர். அந்தவகையில், கூட்டமைப்பினருக்கும் முன்னாள் போராளிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (புதன்கிழமை) முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் இடம்பெற்றுள்ளது. எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக விவாதிக்கப்பட்ட இந்த சந்திப்பில், கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான...

ஊழலற்ற ஆட்சி! உள்ளிட்ட நலன்சார் திட்டங்களுடன் ஈ.பி.டி.பி-இன் தேர்தல் விஞ்ஞாபனம்

ஊழலற்ற ஆட்சி! நடந்த ஊழல் மோசடிகளுக்கு உடன் விசாரணை என்பதை வலியுறுத்தி ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திலுள்ள கட்சி தலைமையகத்தில், கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவினால் நேற்று (புதன்கிழமை) தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டது. சொன்னதைச் செய்தவர்கள்! செய்வதை சொல்பவர் என்ற மகுட வாக்குடன் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்...

உள்ளுராட்சி தேர்தல் பிரசார பணிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள்

எதிர்வரும் பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான பிரசார பணிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மோதல்கள் மற்றும் வன்முறைகள் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அதன்படி பத்து பேருக்கு மேலதிகமாக வீடு வீடாக சென்று பிரசார நடவடிக்கையில் ஈடுபட முடியாது என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர...

தமிழ்த் தேசியப் பேரவையின் யாழ்ப்பாணம் மாநகரசபை வேட்பாளர் அறிமுகம்

உள்ளூராட்சிசபைத் தேர்தலில் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் சின்னத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் பொது அமைப்புக்களுடன் இணைந்து போட்டியிடும் தமிழ்த் தேசிய பேரவையின் யாழ் மாநகரசபைக்கான வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நேற்று 26.12.2017 செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. யாழ்ப்பாணம் கச்சேரி, வை.எம்.சி.ஏ மண்டபத்தில் பிற்பகல் 04.30 மணியளவில் நடைபெற்ற கூட்டத்தில் வேட்பாளர்கள் அறிமுகம் செய்துவைக்கப்பட்டதோடு...

பெண்களை மாத்திரம் கொண்டு வாக்களிப்பு நிலையங்கள்!

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் நூறு சதவீதம் பெண்களை மாத்திரம் கொண்டு இயங்கும் வகையில் வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மாவட்ட ரீதியில் இரண்டு சதவீதம் இவ்வாறான நிலையங்கள் அமைக்கப்படும் என்றும், இதில் கண்காணிப்பாளர்களாவும் பெண்களே நியமிக்கப்படுவர் என்றும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. அத்தோடு, வாக்களிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ள பகுதிகளில் பாதுகாப்பு மற்றும் ரோந்து...

முதல்வரானால் ஊதியம் பெறாமல் பணியாற்றுவேன்: தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முதல்வர் வேட்பாளர் வி.மணிவண்ணன்

மாநகரசபை முதல்வராக தான் தேர்ந்தெடுக்கப்பட்டால் எந்தவித ஊதியமும் பெறாமல் பணியாற்றுவேன் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முதல்வர் வேட்பாளர் வி.மணிவண்ணன் இன்று அறிவித்தார். தூய கரங்கள் தூய நகரம் என்ற கோசத்தை முன்னெடுத்து இந்தத் தேர்தலை எதிர்கொள்ளவுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள தமிழ்த் தேசியப் பேரவையினால் யாழ் மாநகர முதல்வர் வேட்பாளராக விஸ்வலிங்கம் மணிவண்ணன் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்....

தபால் மூல வாக்களிப்பிற்கான திகதிகள் அறிவிப்பு: தேர்தல்கள் ஆணைக்குழு!

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் ஜனவரி 25 ஆம் 26 ஆம் திகதிகளில் நடாத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இத்தகவலை உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான மேலதிக ஆணையாளர் சமன் ஸ்ரீரத்நாயக்க ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார். இதேவேளை, தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் நேரடியாக தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ள அரச...

தமிழ்த் தேசிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நல்லூர்த் தொகுதி வேட்பாளர் அறிமுகம்!

உள்ளூராட்சிசபைத் தேர்தலில் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் சின்னத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் இணைந்து போட்டியிடும் தமிழ்த் தேசிய பேரவையின் நல்லூர் தொகுதி வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நேற்று 25.12.2017 திங்கட்கிழமை நடைபெற்றது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமைச் செயலகத்தில் நேற்று பிற்பகல் 04 மணியளவில் நடைபெற்ற கூட்டத்தில் வேட்பாளர்கள் அறிமுகம் செய்துவைக்கப்பட்டதோடு...

யாழில் மக்கள் முன்னணியின் அனைத்து வேட்புமனுக்களும் ஏற்பு

அகில இலங்கை தமிழ்க் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் யாழ் மாவட்டத்தில் போட்டியிடும் அனைத்து சபைகளின் வேட்புமனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்கொள்ளும் இறுதி தினம் நேற்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்த நிலையில் வேட்புமனுக்கள் ஆராயப்பட்டு யாழ் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட...

வடக்கு முதல்வரின் சொற்படி செயற்படுங்கள்: அங்கஜன்

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டதைப் போன்று, கட்சிகளை பார்க்காமல் நல்ல மனிதர்களுக்கு வாக்களியுங்கள் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன் கோரியுள்ளார். யாழ். மாவட்டத்தில் 16 உள்ளூராட்சி மன்றங்களுக்கு நேற்று (வியாழக்கிழமை) வேட்புமனு தாக்கல் செய்த பின்னர், ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்குறித்தவாறு தெரிவித்தார். வரலாற்றில்...

கிளிநொச்சி மாவட்டத்தில் 9 அரசியல் கட்சிகள் களமிறங்குகின்றன!

எதிர்வரும் உள்ளுராட்சி சபை தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்தில் ஒன்பது அரசியல் கட்சிகளும், ஒரு சுயேட்சை குழுவும் போட்டியிடுகின்றன என கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார் நேற்று (வியாழக்கிழமை) கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். தொடர்ந்தும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில், அன்னலெட்சுமி...

யாழில் பொதுஜன பெரமுனவின் வேட்புமனுக்கள் முற்றாக நிராகரிப்பு!

யாழ். மாவட்ட உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட வேட்பு மனுக்கள் தாக்கல் செய்தமை தொடர்பாக 75 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன என யாழ். மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று (வியாழக்கிழமை) ஊடகவியலாளர்களுக்கு கருத்து வழங்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். தொடர்ந்தும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில்,...

மாவையின் புதல்வன் வலி.வடக்கில் போட்டி?

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசாவின் மகன் கலையமுதன், வலி. வடக்கு பிரதேச சபைக்கான தேர்தலில் தமிழ் அரசுக் கட்சியில் போட்டியிடுகிறார் என அந்தக் கட்சியின் நம்பகரமான தகவல்கள் தெரிவித்தன. வலி.வடக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் சுகிர்தன் இம்முறையும் போட்டியிடுவதுடன், மாவை சேனாதிராசாவின் மகனும் போட்டியிடுகிறார். போர்க்காலத்தில் இந்தியாவில்...

தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து போவோம்: முஸ்ஸிம் காங்கிரஸ்

தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் முஸ்ஸிம் காங்கிரஸ் இணைந்து செயற்படும் என்ற நம்பிக்கையை நாங்கள் கைவிடவில்லை என அக்கட்சியின் பொதுச் செயலாளர் நிஸாம் காரியப்பர் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா முஸ்ஸிம் காங்கிரஸ் மன்னாரில் நேற்று தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து முதற்கட்ட பேச்சுவார்ததையினை மேற்கொள்ளும் வகையில் மு.காவின் உயர்மட்ட குழுவினர் விசேட உலங்குவானூர்தி மூலம் கொழும்பில் இருந்து மன்னார்...

பிறப்பு சான்றிதழ் அற்றோருக்கு தேசிய அடையாள அட்டை!

பிறப்பு சான்றிதழ் இல்லாதவர்களுக்கு தேசிய அடையாள அட்டையை விநியோகிப்பதற்கு ஆட்பதிவு திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஆட்பதிவு திணைக்களத்தில் இதற்காக தனியான பிரிவொன்று செயற்பட்டு வருவதாக ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம் வியானி குணத்திலக தெரிவித்தார். வாக்களிக்க தகுதிபெற்றவர்களில் சுமார் 3 இலட்சம் பேருக்கு தேசிய அடையாள அட்டை இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக தேர்தல்...

உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் தொடர்பில் சுவரொட்டிகளை ஒட்டுவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தடை

உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான பிரசார சுவரொட்டிகளை ஒட்டினால், அவற்றிற்கு மேல் தேர்தல்கள் ஆணைக்குழுவின் சுவரொட்டி ஒட்டப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் தொடர்பில் சுவரொட்டிகளை ஒட்டுவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தடை விதித்துள்ளது. இந்நிலையில், இத்தடையை மீறி சுவரொட்டிகள் ஒட்டினால், தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவுறுத்தல் அடங்கிய சுவரொட்டி அவற்றிற்கு...
Loading posts...

All posts loaded

No more posts