Ad Widget

பேனாவை பயன்படுத்தும்போது கவனம் தேவை – பொலிஸாரின் எச்சரிக்கை

வணிக இடங்களுக்குச் செல்லும்போது தங்கள் சொந்த பேனாவை எடுத்துச் சென்று பயன்படுத்துமாறு பொலிஸார் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர். இதன்மூலம் அவர்கள் தங்கள் விபரங்களை நுழைவாயிலில் உள்ள பதிவு புத்தகத்தில் பாதுகாப்பாக பதிவு செய்யமுடியும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். அத்துடன் சொந்த பேனாவை எடுத்துச் சென்று இவ்வாறு பயன்படுத்துவது...

தீபாவளி பண்டிகை கொண்டாடும் மக்களுக்கு சுகாதார அமைச்சு எச்சரிக்கை!

தீபாவளி பண்டிகை கொண்டாடும் மக்கள், தீப்பற்றக்கூடிய கை கழுவும் திரவங்களை பயன்படுத்திவிட்டு, விளக்குகளை ஒளிரச் செய்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு சுகாதார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று, பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள நிலையில், பெரும்பாலானோர் அல்ஹகோல் அடங்கிய கை கழுவும் திரவத்தை அதிகம் பயன்படுத்தும் சந்தர்ப்பங்கள் அதிகரித்துள்ளன. இந்நிலையில், நாளை (சனிக்கிழமை) தீபாவளி பண்டிகையை...
Ad Widget

ஏனைய மாவட்டங்களில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களை யாழ்ப்பாணத்தில் உரிமை மாற்ற முடியும்!!

“யாழ்ப்பாணம் மாவட்ட மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்கள் மூலம் தொடர்பு கொண்டு முற்பதிவுகளை செய்து தமக்கான சேவைகளை மக்கள் பெற்றுக்கொள்ள முடியும்” இவ்வாறு மாவட்ட மோட்டார் போக்குவரத்து திணைக்கள பிரதி ஆணையாளர் அறிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் தெரிவித்ததாவது; தற்சமயம் எமது அலுவலகத்தினால் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் புதிய மோட்டார் சைக்கிள்களிற்கான உரிமை மாற்றம்...

7ம் திகதிக்கு பின்னர் வேறு மாகாணங்களிலிருந்து வடக்கிற்கு வந்தோர் கவனத்திற்கு!!

நவம்பர் 7ஆம் திகதி சனிக்கிழமைக்குப் பின்னர் வேறு மாகாணங்களிலிருந்து வடக்கு மாகாணத்துக்கு வருகை தந்தோர் தற்போது தங்கியிருக்கும் பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) பதிவு செய்யவேண்டும் என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். இவர்களை வீட்டில் சுயதனிமைப்படுத்துதலுக்கு உட்படுத்துவது தொடர்பான முடிவுகளை அவர்கள் புறப்பட்டு வந்த இருந்து வந்த...

உண்ணி காய்ச்சல் தொடர்பில் அவதானம் தேவை – வைத்தியர் சி.யமுனாநந்தா

உண்ணி காய்ச்சல் தொடர்பில் அவதானம் தேவை என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் சி.யமுனாநந்தா தெரிவித்துள்ளார். தற்பொழுது பரவிவரும் உண்ணி காய்ச்சல் நோய் தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், தற்பொழுது கொரோனா நோய்த்தொற்று பரவி வரும் காலத்தில் எமது பிரதேசத்தில் காய்ச்சல் நோயுடன் பலர் சிகிச்சைக்கு வருகிறார்கள் இந்நிலையில் காய்ச்சல் எவ்வாறு வருகிறது என...

கிளினிக் நோயாளர்களுக்கு வீடுகளுக்கே மருந்துகள் பொதி விநியோகிக்கும் பணி நாளை ஆரம்பம்

அரச வைத்தியசாலைகளில் கிளினிக் நடைமுறையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு ஒரு மாதத்திற்கு போதுமான மருந்துகளை வீடுகளுக்குக் கொண்டு சென்று வழங்க இலங்கை அஞ்சல் திணைக்களத்துடன் இணைந்து சுகாதார அமைச்சால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாளை முதல் (05.11.2020) நாடுமுழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் இருந்து மாதந்த கிளினிக்கில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு மருந்துகள் விநியோகம் மீண்டும்...

பாண் வழங்கலின் போது கோரோனா வைரஸ் பரவும் அபாயம்!

கோரோனா வைரஸ் பரவுதலைக் கட்டுப்படுத்துவதற்கு சுகாதாரத்துறை மிகக் கடினமான நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் நிலையில் பாண் மற்றும் வெதுப்பக உற்பத்தி உணவுகள் விநியோகம் தொடர்பாக உரிய அக்கறை எடுக்கவில்லை என சுட்டிக்காட்டப்படுகின்றது. வடக்கு – கிழக்கு மட்டுமன்றி நாட்டின் சகல இடங்களிலும் பொதுமக்களின் அன்றாட உணவாக வெதுப்பக உற்பத்திகளான பாண், பணிஸ், கேக் போன்றன பயன்படுத்தப்படுகின்றன....

சுகாதாரப் பிரிவு பொதுமக்களிடம் முன்வைத்துள்ள கோரிக்கை!!

சுவாச கோளாறினால் அவதியுறும் நோயாளர்களை வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு சுகாதாரப் பிரிவு பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது. சுவாச கோளாறு உள்ள நோயாளர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படுமாயின், நிலைமை மேலும் மோசமடையக்கூடும் என்பதால் அவர்களை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு காலப்பகுதியில்...

குறிகாட்டுவான் பஸ்ஸில் தொற்றாளர்கள் பயணம்! – கூடப் பயணித்தோருக்கு முக்கிய அறிவிப்பு!!

கொழும்பில் இருந்து இருந்து வந்த கொரோனா தொற்றுக்குள்ளான இருவர் யாழ்ப்பாணத்தில் இருந்து குறிகாட்டுவானுக்குச் சென்ற பஸ்ஸில் பயணித்துள்ளனர். அந்த பஸ்ஸில் பயணித்த ஏனையவர்களை உடனடியாகத் தொடர்பு கொள்ளுமாறு வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார். கடந்த 25ஆம் திகதி இரவு கொழும்பில் இருந்து புறப்பட்ட தொற்றார்கள், மறுநாள் அதிகாலை 26ஆம் திகதி...

கொரோனா தொற்று அறிகுறி இருந்தால் அறிவிப்பதற்கு விசேட தொலைபேசி இலக்கம்!

கொரோனா வைரஸ் தொற்று நோய் தொடர்பான அறிகுறிகள் காணப்பட்டால் வைத்தியசாலைக்குச் செல்வதற்கு முன்னர் அறிவிப்பதற்காக விசேட தொலைபேசி இலக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. விசேட அறிப்பொன்றின் மூலம் சுகாதார அமைச்சு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி, 011-7966366 என்ற இலக்கத்திற்கு அழைத்து கொரோனா தொற்று தொடர்பாக வைத்திய ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என சுகாதார அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

அதிகாரிகள் சரியான நேரத்தில் முடிவுகளை எடுக்காவிட்டால் கடுமையான விளைவுகள் ஏற்படும் – GMOA எச்சரிக்கை

கொரோனா தொற்று தொடர்பாக உரிய அதிகாரிகள் சரியான நேரத்தில் முடிவுகளை எடுக்காவிட்டால் நாடு கடுமையான விளைவுகளை சந்திக்கும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வைரஸ் அபாயத்தில் உள்ள மாவட்டங்கள் குறித்து அதிகாரிகள் இன்னும் முடிவுகளை எடுக்கவில்லை என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரதம செயலாளர், வைத்தியர் ஹரித அளுத்கே சுட்டிக்காட்டினார்....

அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரமே தொடருந்தில் பயணம் செய்யுங்கள் – ரயில்வே அறிவிப்பு

அத்தியாவசிய தேவைக்காக மாத்திரம் தொடருந்து சேவைகளைப் பயன்படுத்துமாறு ரயில்வே திணைக்களம் பயணிகளிடம் கேட்டுள்ளது. இது தொடர்பில் ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர் டிலந்த பெர்ணான்டோ தெரிவித்ததாவது; கோவிட்-19 வைரஸ் பரவல் தாக்கத்தின் காரணமாக தொடருந்து சேவையை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை கடந்த வாரம் மிகக் குறைவான மட்டத்தில் காணப்பட்டது. இதனைக் கருத்திற் கொண்டு அதிவேக தொடருந்து...

வட மாகாணத்தில் வசிப்பவர்களுக்கு விசேட அறிவுறுத்தல் – வைத்தியர் கேதீஸ்வரன்

பொதுமக்கள் மற்றும் நிறுவனங்களின் நிர்வாகத்தினர் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார நடைமுறைகள் பற்றி மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் அறிவுறுத்தலை வழங்கியுள்ளார். இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; கொரோனா வைரஸ் பரவல் நாட்டில் தற்போது தீவிரமடைந்துவரும் நிலையில் ,இந்நோய் பரம்பலை கட்டுப்படுத்தவதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டியுள்ளது. ஆகையால் வடமாகாணத்தில் பின்வரும் செயற்பாடுகளை...

தேசிய முதியோர் செயலகம் விடுத்துள்ள விசேட அறிக்கை!

நாட்டில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து, முதியவர்கள் மற்றும் விசேட தேவை உடையவர்கள் தொடர்பில் கூடிய கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. தேசிய முதியோர் செயலகம் விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, முதியோர் இல்லங்கள் மற்றும் முதியவர்கள் இருக்க கூடிய வீடுகள் இது குறித்து அவதானம் செலுத்துமாறும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது....

வேலைக்கு செல்வோர் பொதுப்போக்குவரத்தில் பயணிப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என கோரிக்கை!

வேலைக்கு செல்வோர் பொதுப்போக்குவரத்தில் பயணிப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் வைத்தியர் பிரசன்ன குணசேன இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா கொத்தணியானது சமூகத்தில் பல்வேறு இடங்களில் விஸ்தரித்துள்ளது. இருப்பினும் சென்ற முறைப் போன்று நாடளாவிய ரீதியில் முடக்கப்படாமல் குறிப்பிட்ட...

செல்லும் இடங்களின் பதிவைப் பராமரிக்க பொதுமக்களிடம் பொலிஸ் கோரிக்கை!!

எதிர்காலத்தில் தேவைப்படும் என்பதால், பொதுமக்கள் தாம் செல்லும் இடங்களை அலைபேசியிலோ அல்லது ஒரு நோட்புக்கிலோ பராமரிக்குமாறு பொலிஸ் கேட்டுக்கொண்டுள்ளது. ஒருவர் இருக்கும் இடத்தைப் பற்றிய தகவலை வழங்கும் அலைபேசி செயலியைப் பயன்படுத்தலாம் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் இன்ஸ்பெக்டர் அஜித் ரோஹானா தெரிவித்தார். மினுவாங்கோடா கோவிட் -19 கொத்தணியுடன் தொடர்புடைய...

அண்மைய நாள்களில் பரவிவரும் கோரோனா வைரஸ் ஒரு நபரிலிருந்து மற்றொருவருக்கு எளிதாகத் தொற்றுகிறது

நாட்டில் அண்மைய நாள்களில் பரவி வரும் கோரோனா வைரஸ் ஒரு நபரிலிருந்து மற்றொருவருக்கு எளிதில் தொற்றுகின்றமை அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கோரோனா வைரஸைப் பற்றி ஆராய்ந்து வரும் மருத்துவ வல்லுநர்கள், தற்போது பரவிவரும் வைரஸின் தீவிரம் மிக அதிகமாக இருப்பதாகவும், அது வேகமாகவும் எளிதாகவும் பரவக்கூடுமெனக் கண்டறியந்துள்ளனர் என்று சுகாதார அமைச்சின் பேச்சாளர்,...

கம்பஹாவிலிருந்து வடமாகாணத்துக்கு வருகை தந்தவர்கள் தொடர்பில் ஆளுநரின் அறிவிப்பு!

மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலையிலிருந்து வந்தவர்கள் வடமாகாணத்தின் எப்பகுதியில் தங்கியிருந்தாலும் உடனடியாக அருகிலிருக்கும் சுகாதார மருத்துவ அதிகாரிக்கு அறிவிக்கும்படி வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம் சாள்ஸ் கோரிக்கை விடுத்துள்ளார். குறித்த விடயம் தொடர்பாக ஆளுநரின் ஊடகப் பிரிவு அனுப்பிவைத்த செய்திக் குறிப்பிலேயே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும், ”கம்பஹா, மினுவாங்கொட ப்ரண்டிக்ஸ் தொழிற்சாலையில் அடையாளம் காணப்பட்ட...

பொலிஸார் பொதுமக்களுக்கு விடுத்துள்ள அவசர அறிவிப்பு!!

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸ் மா அதிபர் கட்டுப்பாட்டு மையம் மற்றும் பொலிஸ் மா அதிபர் செயற்பாட்டு மையம் என்பன பொலிஸ் தலைமையகத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவல் குறித்து பொதுமக்கள் 1933 என்ற அவசர இலக்கத்திற்கு பொலிஸ் மா அதிபர் கட்டுப்பாட்டு மையத்தை தொடர்புகொண்டு தகவல்களை வழங்க முடியும் என...

அபாயகரமான சிக்கலான நிலையை எதிர்கொள்ளும் தறுவாயில் யாழ். மாவட்டம் – அரசாங்க அதிபர்

யாழ் மாவட்டத்தில் தற்போதைய அனர்த்தத்தினை மிகவும் சிக்கலான நிலைமையில் எதிர்கொள்ளும் பாரிய ஒரு அபாயகரமான நிலைமை ஏற்பட்டிருக்கின்றதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்துள்ளார். யாழ் மாவட்ட செயலகத்தில் யாழ்ப்பாண மாவட்ட கொரோனா ஒழிப்பு செயலணி கூட்டம் நேற்று இடம்பெற்றது. கூட்ட நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அரசாங்க அதிபர் மேற்கண்டவாறு...
Loading posts...

All posts loaded

No more posts