- Saturday
- April 27th, 2024
இன்று நள்ளிரவு முதல் வைபர் சமூக வலைத்தளமானது இலங்கையில் இயங்கும் என அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர், சுதர்சன குணவர்தன தெரிவித்துள்ளார் இதேவேளை Facebook உள்ளிட்ட சமூகவலைத்தளங்கள் மீதான இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் தடை வருகின்ற வெள்ளிக்கிழமை நீங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது Facebook நிறுவன அதிகாரிகள் அரச அதிகாரிகளுடன் பேச்சு நடாத்த வியாழன் இலங்கை...
யாழ். மாநகர சபையில் ஆட்சியமைக்கும்போது எமது கட்சி முதன்மை வேட்பாளர் வி. மணிவண்ணன் மேயராக நிறுத்தப்படுவார்” என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அலுவலகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இச்சந்திப்பில் கலந்துகொண்ட ஊடகவியலாளர்களால் யாழ். மாநகர சபை உள்ளிட்ட ஏனைய சபைகளில் ஆட்சி...
உள்ளுராட்சி சபைகள் தேர்தல் முடிவுகள் : யாழ் மாவட்டம் (நன்றி: வாகீசம் இணையம்) கிளிநொச்சி மாவட்டம் கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையில் 21 வட்டாரங்களில் 16 வட்டாரங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும், 05 வட்டாரங்களில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமாரின் சுயேட்சைக் குழுவும் வெற்றிப்பெற்றுள்ளது. பச்சிலைப்பள்ளியில் எட்டு வட்டாரங்களில் 6 வட்டாரங்களில் தமிழ் தேசியக்...
நடந்து முடிந்துள்ள உள்ளுராட்சிசபைத்தேர்தலில் வடக்கு கிழக்கு மக்கள் ஆர்வமாக வாக்களித்துள்ளனர். வாக்களிப்புக்கள் அசம்பாவிதங்கள் இன்றி சுமுகமாக இடம்பெற்றது. வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இரவு 8 மணிக்கு முடிவுகள் வெளியாகும். மக்களின் வாக்களிப்பு வீதம் வருமாறு யாழ்ப்பாணம்: 62% கிளிநொச்சி : 76% முல்லைத்தீவு:78% மன்னார்: 80% வவுனியா : 70% திருகோணமலை : 85%...
மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தில் தேர்தல் பரப்புரை செய்தார்கள் என தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு எதிராக தமிழ் தேசிய கூட்டமைப்பினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை, மல்லாகம் நீதவான் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அத்துடன், இந்த வழக்கிற்கு பின்னணியில் செயற்பட்டதாக கூறப்படும், தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் ரட்ணஜீவன் கூலின் நேர்மைத்தன்மையில் சந்தேகம் வெளியிட்ட நீதிபதி, அவர் எழுதிய...
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் அவர்களுக்க பகிரங்க சவால் விடுத்துள்ளார். சிங்கள மக்களை திருப்த்திப்படுத்தும் நோக்கில் தமிழீழக் கோரிக்கையினை தமிழ்மக்கள் கைவிட்டுவிட்டார்கள் என எம். ஏ. சுமந்திரன் அவர்களை மையப்படுத்தி செய்திகள் வெளிவந்திருந்தன. இந்நிலையில் கனடாவில் இடம்பெற்று வருகின்ற நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின்...
தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் இரட்ணஜீவன் ஹுல் வெளியிட்டதாக பத்திரிகை அறிக்கை ஒன்று மின்னஞ்சலில் கிடைத்துள்ளது .அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது 17.01.2018 அன்று யாழ்ப்பாணத்தில் உள்ள இளங்கலைஞர் மண்டபத்தில் நடைபெற்ற தமிழ்த் தேசியப் பேரவையின் விஞ்ஞாபன வெளியீட்டின்போது தேர்தல்கள் ஆணைக்குழுவில் அங்கம்வகிக்கின்ற என்னைப் பற்றித் தமிழ்த் தேசியப் பேரவையின் யாழ் முதன்மை வேட்பாளரான சட்டத்தரணி வி. மணிவண்ணன் '”நாங்கள் ஒன்றை...
தமிழ்த் தேசிய அரசியலில் 50 இற்கு 50 என்ற பெண் சமத்துவம் பேணப்படவேண்டும் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
எமது தேசியப் போராட்டம் பெண் சமத்துவத்திற்காக பெரும் மாற்றத்தை ஏற்படுத்த விரும்பி செயற்பட்டுவந்திருந்தது. அதே வழியில் தமிழ்த் தேசிய அரசியலிலும் 50 இற்கு 50 என்ற விகிதத்தில் பெண் சமத்துவம் பேணப்பட வேண்டும் என வலியுறுத்தியிருக்கும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், புலம்பெயர் தமிழ் செயற்பாட்டாளர்களில் 70 வீதமானோர் பெண்களாக இருக்கும் சூழ்நிலையில்...
தமிழ்த் தேசியப் பேரவையைத் தோற்கடிப்பதற்காக அரச இயந்திரம் முழுமையாக கழமிறக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் திணைக்கள அதிகாரிகளே தமக்கு எதிராக செயற்பட்டுவருவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அமைப்பாளரும் தமிழ்த் தேசியப் பேரவையின் யாழ் மாநகர முதல்வர் வேட்பாளருமான சட்டத்தரணி வி.மணிவண்ணன் ,தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குச் சார்பாக பல்வேறு கட்டுரைகளை எழுதிய ஒருவரை தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரி...
டான் ரீவி அலுவலகத்தினுள் புகுந்த நபரால் செய்தி ஆசிரியர் தாக்கப்பட்டதற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி கண்டணம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் முன்னணியின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி மணிவண்ணன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. டான் ரீவி அலுவலகத்திற்குள் புகுந்து அதன் செய்தியாசிரியர் தயா மாஸ்டர் மீது நடாத்தப்பட்ட தாக்குதல் மிக வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியது....
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கான மக்கள் ஆதரவு சரிந்துவிட்டது என்ற செய்தி பெப்ரவரி 11ஆம் திகதி வருமாக இருந்தால், புதிய அரசமைப்பை நிறைவேற்ற முடியாது போகும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், கூட்டமைப்பின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். பருத்தித்துறையில் நேற்று இடம்பெற்ற வேட்பாளர் அறிமுக நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும்...
யாழ்.நகரத்தை எவ்வாறு அபிவிருத்தி செய்வது என்பது தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் தயாரிக்கப்பட்டுள்ள “யாழ் 2020 - நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட தேசம்” செயற்றிட்டம் தொடர்பான வரைபடம் இன்று (06.01.2018) சனிக்கிழமை நண்பகல் வேளையில் வெளியிடப்பட்டுள்ளது. யாழ் நகரிலுள்ள விருந்தினர் தங்ககம் ஒன்றில் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் குறித்த “யாழ் 2020” செயற்றிட்ட வரைபடத்தை வெளியிட்ட தமிழ்த்தேசிய...
தமிழ்த்தேசிய விடுதலைக்கூட்டமைப்பு வேட்பாளர் சுந்தர்சிங் விஜயகாந்த் நீதிமன்றில் குற்றவாளியாக அறிவிக்கபட்டமைதொடர்பிலும் அது தொடர்பிலான ஊடக செய்திகள் தொடர்பிலும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முன்னாள் உறுப்பினர் என்று ஊடகங்களில் வெளிப்படுத்துவதானது எமது கட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அது வருமாறு. சட்டவிரோதமான செயற்பாடுகளையும் சமூகவிரோத செயற்பாடுகளையும் மேற்கொண்டு வந்தமையால் கட்சியிலிருந்து சுமார் 7 வருடங்களுக்கு முன்னர் வெளியேற்றப்பட்டவர் சுந்தர்சிங்...
தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதரீதியாக பலம்பெற்றிருந்த சூழலில் சமாதான உடன்படிக்கை ஏற்படப்போகிறது என்ற நிலையில் குமார் பொன்னம்பலம் உயிரோடு இருந்தால் அவர் தான் தமிழர்களின் ஜனநாயக அரசியல் அணிக்கு தலைமைதாங்குவார் என்ற நிலை இருந்தது. அது விடுதலைப் புலிகளின் 30 வருட கால அரசியல் கோரிக்கையை ஒரு பயங்கரவாதக் கோரிக்கையாக சித்தரிக்க முடியாமல் போய்விடும், புலிகளையும்...
நாங்கள் சின்னங்களைப் பார்த்து வாக்களிப்பவர்களல்ல எங்களுக்கு நல் எண்ணங்களும் கொள்கைகளுமே முக்கியமானவை எனத் தெரிவித்த நாயன்மார்கட்டில் வசிக்கும் வயதான பெண்மணி ஒருவர் மக்கள் நடக்கின்ற எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டே இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். தமிழ் தேசியப் பேரவையின் ஆதரவாளர்களால் ஒழுங்குசெய்யப்பட்ட தேர்தல் விளக்கக் கூட்ட நிகழ்வென்று நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் நாயன்மார்க்கட்டில் நடைபெற்றது. அந்நிகழ்வில் பெருமளவு மக்கள் கலந்துகொண்டிருந்தனர்....
உள்ளூராட்சித் தேர்தலில் அகில இலங்கை தமிழ்க் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசிய பேரவையினர் இன்று (01.01.2018) திங்கட்கிழமை சின்மயாமிஷன் பிரம்மச்சாரிய யாக்கிரத சைதண்யா சுவாமிகள் மற்றும் யாழ் நல்லை ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர பிரம்மச்சாரிய சுவாமிகள் ஆகியோரைச் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுள்ளனர். இன்று காலை 09.30 மணியளவில் யாழ் சின்மயாமிஷன் சுவாமிகள்...
உள்ளூராட்சித் தேர்தலில் அகில இலங்கை தமிழ்க் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசிய பேரவையினர் தமது தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை ஆரம்பிக்குபொருட்டு இன்று (31.12.2017) ஞாயிற்றுக்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு ஜஸ்ரின் பேர்ணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை மற்றும் யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்திரு ஜெபரட்ணம் ஆடிகளால் ஆகியோரைச் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுள்ளனர். இன்று...
தேரரின் தகனக்கிரியைக்கெதிராக தொடுக்கப்பட்ட வழக்கு தோல்வி. நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பிக்க மறுப்பு!
யாழ்ப்பாணம் ஆரியகுளம் நாக விகாரையின் விகாராதிபதின் உடலை தகனம் செய்வதற்கு யாழ்.நீதிவான் நீதிமன்றம் அனுமதிவழங்கி உத்தரவிட்டது. யாழ்ப்பாணம் - ஆரியகுளம் நாக விகாரையின் விகாராதிபதி உயிரிழந்துள்ள நிலையில் அவரது உடலினை யாழ்.முற்றவெளிப் பகுதியில் தகனம் செய்வதற்கு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் அதற்கு தடை விதிக்க வேண்டும் என கோரி சட்டத்தரணி மணிவண்ணன் மற்றும் 12 சட்டத்தரணிகள்...
2012 ம் ஆண்டு ஆனந்த விகடனில் அநாமதேயமான முன்னாள் போராளி ஒருவரின் பேட்டி வெளியாகியிருந்தது அப்பேட்டியில் முன்னாள் போராளி ஒருவர் தான்பல்வேறு கொடுமைகளை சந்தித்து பாலியல் கொடுமைகளுக்கு உள்ளகிய நிலையில் வேறுவழியின்றி தற்போது பாலியல் தொழில் செய்வதாக ஒப்புதல் வாக்குமூலம் கூறியதாக வெளியாகயிருந்தது. அந்த பேட்டியினை கண்டவர் ஈழத்து மாணவ பத்திரிகையாளரான அருளினியன் ஆவார்....
Loading posts...
All posts loaded
No more posts