கோதபாயவை ஜனாதிபதி ஆக்குவேன் என்கிறார் சுப்ரமணியம் சுவாமி

2020 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலானது வரலாற்றை மாற்றக் கூடிய தேர்தலாக அமையும் என பாரதீய ஜனதா கட்சியின் சிரேஸ்ட தலைவர் சுப்ரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார். முன்னாள் பாதுகாப்பு செயலாளரான கோதபாய ராஜபக்ஸவை 2020 இல் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதன் மூலம் பெறப்படும் வெற்றியே இதற்கான காரணமாக அமையும் எனவும் அவர் தனது...

சமூகவலைத்தளங்கள் மீதான தடை: அரச நிறுவனங்களின் வருவாய் அதிகரிப்பு!

ஃபேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மீதான தடையானது, இலங்கையின் அரச நிறுவனங்களின் வருவாயை அதிகரிக்கச் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த தடைக் காலத்தில் ஸ்ரீலங்கா ரெலிகொம் மற்றும் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு ஆகியன ஒரு தினத்தில் 200 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான வருவாயை ஈட்டியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. இதேவேளை, ஃபேஸ்புக்கை கட்டுப்படுத்துவது குறித்த விவாதங்களை...
Ad Widget

சுமார் 500 மில். ரூபாயில் சாவகச்சேரி நகரம் அபிவிருத்தி

உலக வங்கியின் சுமார் 500 மில்லியன் ரூபாய் நிதி உதவியில், சாவகச்சேரி நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்படவிருப்பதாக, சாவகச்சேரி நகரசபைச் செயலாளர் க.சண்முகதாசன் தெரிவித்தார். தென்மராட்சி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், நேற்று முன்தினம் (12) இடம்பெற்ற போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “உலக வங்கியால் சாவகச்சேரி நகர...

வடக்கில் இராணுவம் நடத்தும் முன்பள்ளிகள் இனி மாகாண சபையிடம்!

இராணுவ நிர்வாகத்தின் கீழ் இயங்கும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தினால் நிர்வகிக்கப்படும் முன்பள்ளிகளை வடமாகாண சபையிடம் ஒப்படைப்பதற்கான கோரிக்கையினை யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றில் முன்வைப்பதற்கான தீர்மானம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. வடமாகாண சபையின் 118வது அமர்வு நேற்று (13) வடமாகாண சபையின் பேரவை செயலக சாப மண்டபத்தில் நடைபெற்ற போது வடமாகாண சபையின் அவை தலைவர்...

காணமல்போன மீனவர்களை விமானம் மூலம் தேட நடவடிக்கை

முல்லைத்தீவு நாயாற்று பகுதியில் தொழிலுக்கு சென்ற சிலாபத்தினை சேர்ந்த மூன்று மீனவர்கள் இதுவரை திரும்பி வராத நிலையில் அவர்களை தேடும் நடவடிக்கையில் மீனவர்கள் தொடர்ந்தும் ஈடுபட்டுள்ளனர். 12 ஆம் திகதி அதிகாலை முல்லைத்தீவு நாயாற்று பகுதியில் இருந்து மூன்று மீனவர்கள் ஒரு படகில் மீன்பிடிப்பதற்காக கடலுக்குச் சென்றனர். சிலாபத்தினை சேர்ந்த 51 வயதுடைய மில்ராஜ் மிரண்டா,...

ஆண்மையை நிரந்தரமாக இழக்கச் செய்யும் மருந்துகள் இல்லை; உலக சுகாதார நிறுவனம்

அம்பாறை மற்றும் கண்டி கலவரங்களை தொடர்ந்து ஆண்மையிழக்கச் செய்யும் மருத்துகள் குறித்த விவகாரம் சர்வதேச சமூகத்தையும் கவலைக்குள்ளாக்கியுள்ளது. அம்பாறையில் முஸ்லிம்களின் உணவகத்தில் ஆண்மையிழக்கச் செய்யும் மருந்து கலந்த உணவு வழங்கப்பட்டதாகக் கூறி சிலர் அந்த உணவகத்தை தாக்கியதுடன் முஸ்லிம்களுக்கு சொந்தமான ஏனைய சொத்துக்கள், பள்ளிவாசல் ஆகியவற்றையும் தாக்கினர். பின்னர் கண்டியில் வேறு ஒரு காரணத்தை காட்டி...

VPN தொழில்நுட்பம்

கண்டியில் கடந்த வாரம் எழுந்த இன ரீதியிலான பிரச்சினைகளின் பின்னணியில், ஒரு கட்டத்தில் கண்டியில் 3G, 4G இணைய சேவையில் மட்டுப்படுத்தலை செய்தது மட்டுமல்லாது நாடுமுழுவதிலும் சமூக வலைத்தளங்களான பேஸ்புக், வைபர், வட்ஸ்அப் ஆகிய வலைப்பின்னல்களை அரசாங்கம் தடை செய்தது. இத்தடையானது சட்ட ரீதியில் தண்டனைக்குரிய குற்றமாக அமையுமாறு இல்லாமல் வெறுமனே அச்சேவைகளை தற்காலிகமாக முடக்குவதற்கான...

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் இலங்கை விவகாரங்களுக்கான அதிகாரிகளுடன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஜெனீவாவில் சந்திப்பு

இலங்கை விவகாரம் தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு நியாயாதிக்கத்தை அளிக்கும் தீர்மானத்தை அல்லது விசேட சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தை உருவாக்கும் தீர்மானத்தை மேற்கொள்ளுமாறு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அங்கம்வகிக்கும் உறுப்புநாடுகளிடம் வலியுறுத்த வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்த் தேசிய மக்கள்...

நள்ளிரவு முதல் Viber இயங்கும் வெள்ளி Facebook இயங்கும்

இன்று நள்ளிரவு முதல் வைபர் சமூக வலைத்தளமானது இலங்கையில் இயங்கும் என அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர், சுதர்சன குணவர்தன தெரிவித்துள்ளார் இதேவேளை Facebook உள்ளிட்ட சமூகவலைத்தளங்கள் மீதான இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின்   தடை  வருகின்ற வெள்ளிக்கிழமை நீங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது Facebook  நிறுவன அதிகாரிகள்  அரச அதிகாரிகளுடன் பேச்சு நடாத்த வியாழன் இலங்கை...

பேஸ்புக்கில் பொய்ப் பிரச்சாரம் செய்த மாணவன் விளக்கமறியலில்

இனங்களுக்கு இடையில் மோதல் ஏற்படும் வகையில் பேஸ்புக் ஊடாக பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொண்டு வந்த கொழும்பிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றின் மாணவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் 26ம் திகதி வரையில் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. அண்மையில் குற்ற விசாரணைப் பிரிவினரால் அந்த மாணவன் கைது செய்யப்பட்டிருந்தார். 18 வயதுடைய...

யாழ்ப்பாணத்தில் காற்றுடன் கூடிய மழை!

கடும் வறட்சியின் பின்னர் யாழ்ப்பாணத்தின் பல பாகங்களிலும் இன்று பரவலபக பெருமழை மழை பெய்துவருகின்றமையால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இன்று காலை முதல் யாழ் மாவட்டத்தின் அநேக பகுதிகளில் அதிக காற்றுடன் மழை பெய்தவருகின்றது. இதனிடையே இலங்கையைச் சூழவுள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்ட ஒரு அலைபோன்ற தளம்பல் நிலை ஒரு தாழமுக்கப் பரப்பாக தீவிரமடைந்துள்ளதுடன் அது மேலும் வலுவடையுமென...

வளிமண்டலத்தில் மாற்றம் ; மீனவர்களுக்கு எச்சரிக்கை !

அடுத்துவரும் 48 மணித்தியாலங்களில் கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்படுவதுடன் காற்றின் வேகம் அதிகரிப்பதால் மீனவர்கள் கடற்பகுதிக்கு செல்வதை தவிர்க்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது. இதேவேளை, இடியுடன் கூடிய மழையின்போது தற்காலிகமாக கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்படுவதுடன் காற்றின் வேகமானது சடுதியாக அதிகரித்து வீசக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும் கடலில் பயணம் செய்வோரும் இவ்விடயத்தில்...

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தை முற்றாக முடக்கும் போராட்டம் ஆரம்பம்!

தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுவரும் யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள், பல்கலைக்கழகத்தை முற்றாக முடக்கும் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று (திங்கட்கிழமை) முதல் முன்னெடுக்கப்படும் இப்போராட்டத்தில், பல்கலைக்கழகத்தின் மின்குமிழ்கள் அணைக்கப்படல், நீர் விநியோகம் துண்டிக்கப்படல், பிரதான வாயிற் கதவுகளை மூடல் ஆகிய எதிர்ப்பு நடவடிக்கைகளை வெளிப்படுத்தி ஊழியர்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். குறித்த போராட்டத்திற்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக நிர்வாக...

யாழில். ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல் விடுத்த இருவருக்கு பிணை!

ஊடகவியலாளரின் கடமைக்கு இடையூறு விளைவித்து, அவரின் புகைப்பட கருவியை சேதமாக்கி ஊடகவியலாளரை அச்சுறுத்திய இருவரை பிணையில் செல்ல யாழ்.நீதிவான் நிபந்தனை அடிப்படையிலான பிணையில் செல்ல அனுமதித்துள்ளார். யாழ்.கொக்குவில் சந்திக்கு அருகாமையில் உள்ள வர்ண நிறபூச்சு (பெயின்ட்) விற்பனை நிலையம் ஒன்றின் மீது கடந்த வெள்ளிக்கிழமை இளைஞர் குழு ஒன்று தாக்குதலை மேற்கொண்டது. குறித்த தாக்குதல் சம்பவம்...

‘வடக்கின் பெரும் போர்’- சம்பியனானது யாழ் மத்திய கல்லூரி அணி

வடக்கின் பெரும் போர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணிக்கும் சென் ஜோன்ஸ் கல்லூரி அணிக்குமிடையில் இடம்பெற்ற கிரிக்கெட் போட்டித்தொடரில் யாழ் மத்தியகல்லூரி வெற்றிபெற்று சம்பியனானது. யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் கடந்த வியாழக்கிழமை காலை ஆரம்பமான வடக்கின் பெரும் போர் என வர்ணிக்கப்படும் இரு கல்லூரிகளுக்கும் இடையிலால் இடம்பெறும் 112 ஆவது கிரிக்கெட்...

பிரபாகரன் இறந்ததற்காக நான் சந்தோஷப்படவில்லை! ; ராகுல் காந்தி

தனது தந்தை கொல்லப்பட்ட பின்னர், பாதுகாப்புச் சூழலே மாறிவிட்டதாகக் குறிப்பிட்டுள்ள இந்தியாவின் தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் புதல்வருமான ராகுல் காந்தி, 2009ஆம் ஆண்டில் பிரபாகரன் இறந்ததைத் தொலைக்காட்சியில் பார்த்ததாகவும், அதன்போது தனக்கு இரண்டு விதமான உணர்வுகள் ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ள அவர், அவரை ஏன் இப்படி அவமானப் படுத்துகிறார்களென்றும் அவரது...

உணவு ஒவ்வாமையினால் 98 பேர் வைத்தியசாலையில்

உணவு ஒவ்வாமையினால் 98 பேர் ஊர்காவற்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஊர்காவற்துறை பகுதியில் உள்ள அந்தோனியார் ஆலயத்தில் வழங்கப்பட்ட உணவினை உட்கொண்டவர்களே இவ்வாறு ஒவ்வாமை ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று (11) காலை தவக்கால வழிபாடு நடைபெற்று வந்த வேளையில் அந்தோனியார் ஆலய நிர்வாகத்தினால் திருப்பலியில் கலந்துகொண்டவர்களுக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. அந்த உணவினை உட்கொண்டவர்கள் மயக்கடைந்து விழந்துள்ளனர்....

யாழ். வங்கி பண மோசடி: கைதுசெய்யப்பட்ட நால்வரின் விளக்கமறியல் நீடிப்பு

யாழ்ப்பாணத்தில் அரசாங்க வங்கியொன்றுக்கு கொண்டுவரப்பட்ட பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், கைதுசெய்யப்பட்ட நால்வரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட இவர்களை, எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த 9 ஆம் திகதி அநுராதபுரம் பிரதேச வங்கியொன்றில் இருந்து யாழ்ப்பாணத்தில் உள்ள வங்கியொன்றுக்கு கொண்டுச்செல்லப்பட்ட 11,074,000 ரூபாய் பணத்தில் 8,020,000...

பேஸ்புக், வட்ஸ்அப் மீதான தடை: இன்று விஷேட கலந்துரையாடல்

கண்டியில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களால் முடக்கப்பட்டிருந்த பேஸ்புக், வட்ஸ்அப், வைபர் போன்ற சமூக வலைதளங்களை மீள செயற்படுத்துவது குறித்து இன்று (திங்கட்கிழமை) விஷேட கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது. குறித்த கலந்துரையாடலில், அரச அதிகாரிகள், இலங்கை தொலைதொடர்புகள் மற்றும் ஒழுக்காற்று ஆணைக்குழு அதிகாரிகள் கலந்துக்கொள்ளவுள்ளனர். சமூக வலைத்தளங்கள் ஊடாக இனவாத மற்றும் பொய்யான தகவல்கள் பரப்பப்படுவதைத் தவிர்ப்பதற்காகவே பேஸ்புக்,...

புதிய உள்ளூராட்சி மன்ற சபைகளை நிறுவும் திகதி உத்தியோகபூர்வமாக அறிவிப்பு!

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலையடுத்து அதற்கான உள்ளூராட்சி மன்றங்களை நிறுவும் பணிகள் எதிர்வரும் 20ஆம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவித்துள்ளது. ஏற்கனவே உள்ளூராட்சி மன்றங்களை நிறுவும் பணிகள் கடந்த 6ஆம் திகதி ஆரம்பிக்கப்படவிருந்த நிலையில், ஒவ்வொரு மாவட்டங்களினதும் பெண் வேட்பாளர்களின் பெயர் பட்டியல் கிடைக்கத் தாமதமாகிது. இந்நிலையில் தற்போது 20ஆம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளதாக...
Loading posts...

All posts loaded

No more posts