இனவாதத்தைக்களையும் அரசியல் விருப்பு ஸ்ரீலங்கா அரசிடம் இல்லாமையே கண்டி கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லீம் மக்களுக்கும் நீதி கிடைக்காமைக்கு காரணம். ஐ.நாவில் கஜேந்திரகுமார்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் பிரதான அவையில் இடம்பெற்ற பொது விவாதத்தில் விடயம் 9ல் கலந்து கொண்டு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆற்றிய உரை இங்கு வருமாறு. இனவாதத்தைக்களையும் அரசியல் விருப்பு ஸ்ரீலங்கா அரசிடம் இல்லை. கண்டி கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லீம் மக்களுக்கு நீதி கிடைக்காமைகும் அந்த இனவாததே காரணம். ஐ.நாவில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஐ.நா மனித...

கூட்டமைப்பினரை விலகிச் செல்லுமாறு பேரணியில் பங்கேற்றோர் கோரல்

மட்டக்களப்பில் இடம் பெற்ற போராட்டத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களை பேச விடாது மக்கள் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். வடக்கு கிழக்கு மகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் ஏற்பாட்டில் இன்று (19) செவ்வாய்கிழமை மட்டக்களப்பில் நடைபெற்ற மக்கள் எழுச்சிப் பேரணிக்கு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சீனித்தம்பி யோகேஸ்வரன், சிறிநேசன் மற்றும்...
Ad Widget

கிழக்கின் மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் ஒலித்த அழுகுரல்கள்!

ஐநாவில் மீண்டும் இலங்கை அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்கக் கூடாது என்பதனையும் சர்வதேச விசாரணையே வேண்டும் என்பதனையும் வலியுறுத்தி இன்று (19.03.2019) செவ்வாய்க்கிழமை கிழக்கில் மக்கள் எழுச்சிப் பேரணி ஒன்று இடம்பெற்றது. இதன் போது கல்லடி பாலத்தில் இருந்து குறித்த பேரணி ஆரம்பமாகி பின்னர் ரயில் நிலைய வீதி ஊடாக கடந்து காந்தி பூங்கா வரை...

தென்னிலங்கையை அச்சத்தில் ஆழ்த்தியுள்ள குள்ள மனிதர்கள்

நாட்டின் பல பகுதிகளில் குள்ள மனிதர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குறித்த குள்ள மனிதர்கள், மக்களைத் தாக்கிவருவதாக முறைப்பாடுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். அந்தவகையில், மாத்தறை மாவட்டத்தில் நேற்று (திங்கட்கிழமை) குள்ள மனிதர்கள் தங்களை தாக்கியதாக சிலர் பொலிஸ் நிலையத்தில் முறைபாடுகளைப் பதிவு செய்துள்ளனர். மாத்தறை, தொட்டமுன பகுதியைச் சேர்ந்த...

இலங்கை விவகாரத்தில் சிறப்பு அறிக்கையாளரை ஐ.நா.நியமிக்க வேண்டும்: கருணாஸ்

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் உண்மை நிலைமை கண்டறிய, இலங்கைக்கு ஐ.நா.சிறப்பு அறிக்கையாளர் ஒருவரை நியமிக்க வேண்டுமென தமிழக சட்டமன்ற உறுப்பினர் சே.கருணாஸ் தெரிவித்துள்ளார். ஜெனிவா மனித உரிமை பேரவையில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற இலங்கை விவகாரம் குறித்த விசேட உபகுழுக் கூட்டத்திலேயே சே.கருணாஸ் இதனை குறிப்பிட்டுள்ளார். அந்தவகையில் பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமை மற்றும் மனித நேயச்...

சிகிச்­சைக்காக அனுமதிக்கப்பட்ட நோயளியிடமிருந்து ஹெரோ­யின் மீட்பு

தெல்­லி­ப்பழை வைத்தியசாலையில் சிகிச்­சைக்காகச் சேர்க்­கப்­பட்­டுள்ள நோயாளி ஒரு­வ­ரி­டமிருந்து ஹெரோ­யின் போதைப் பொருள் மீட்­கப்­பட்­டுள்­ளதாக தெரி­விக்­கப்­பட்­டது. போதைப் பொருள் பாவ­னை­யால் பாதிக்­கப்­பட்ட குடும்­பத் தலை­வர் ஒரு­வரை அதி­லி­ருந்து மீட்­ப­தற்­காக தெல்­லிப்­பழை வைத்தியசாலையில் சேர்க்­கப்­பட்­டி­ருந்­தார். அவ­ருக்கு சிகிச்சை அளிக்­கப்­பட்டு வந்த நிலை­யில் நேற்­று­முன்­தி­னம் அவ­ரி­டம் இருந்து சிறிய பொதி ஒன்று இருந்­துள்­ளது. அது என்­ன­வென்று அரு­கில் இருந்­த­வர்­கள் கேட்­ட­போது...

பட்டதாரிகள் 8500பேருக்கு ஆசிரியர் நியமனம்! – கல்வி அமைச்சர்

பட்டதாரிகளுக்கு அரச தொழிலை பெற்றுக்கொடுக்கும் பொருட்டு 8500 பட்டதாரிகளை இவ்வருடத்தில் ஆசிரியராக நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்போவதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். நாட்டில் வேலையில்லா பட்டதாரிகள் அதிகரித்துள்ளமை குறித்து நேற்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும், பட்டதாரிகளுக்கு அரச தொழில் வழங்கம் வேலைத்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 500 பேரை...

புலிகளுடனான யுத்தத்தில் எந்த தவறையும் செய்யவில்லை – விசாரணைக்கும் அஞ்சவில்லை!! : இராணுவம்

விடுதலை புலிகளுடனான யுத்தத்தின்போது படையினர் எந்த தவறையும் செய்யவில்லை. எனவே தமது படையினரை பாதுகாப்பதற்காக எந்தவொரு விசாரணைக்கும் தயாராக இருப்பதாக இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க கூறியுள்ளார். வெலிகமவில் நேற்று முன்தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “எந்தவொரு விசாரணையை எதிர்கொள்வதற்கும் நாங்கள்...

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு ஆதரவு தெரிவித்து திருநெல்வேலியிலும் ஹர்த்தால்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு ஆதரவு தெரிவித்து திருநெல்வேலியிலும் முழுமையான ஹர்த்தால் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தில் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ள ஹர்த்தலை முன்னிட்டு திருநெல்வேலி வர்த்தர்கள் தங்களது கடைகளை மூடி ஆதரவு வழங்கியுள்ளனர். இவ்வாறு கடைகள் மூடப்பட்டுள்ளமையால் மக்களின் நடமாற்றம் குறைவாக காணப்படுகின்றது. இதேவேளை கிளிநொச்சியிலுள்ள மருந்தகங்கள், உணவகங்கள் தவிர்ந்த அனைத்த வர்த்தக நிலையங்களும் இன்று (செவ்வாய்க்கிழமை) மூடப்பட்டுள்ளன....

மக்கள் பிரதிநிதிகள் சுயநலமாக செயற்பட்டதாலேயே காணிகள் அபகரிக்கப்பட்டன –விக்னேஸ்வரன்

தமிழ் மக்களின் பிரதிநிதிகள் சுயநலமாக செயற்பட்டதாலேயே கிழக்கில் காணி அபகரிப்புகள் சட்ட ரீதியற்ற முறையில் முன்னெடுக்கப்படுவதாக வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்பொதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், தமிழ் பேசும் மக்களின் காணிப் பிரச்சினைகள் சம்பந்தமாக...

வடக்கில் 14 பாடசாலைகளை தேசியப் பாடசாலையாகத் தரமுயர்த்த ஆளுநர் நடவடிக்கை!!!

வடக்கு மாகாணத்தின் 14 மாகாண பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்துவதற்கான கோரிக்கையினை மத்திய கல்வி அமைச்சிற்கு வழங்குவதற்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் நடவடிக்கை எடுத்துள்ளார். இந்த தகவலை மாகாண ஆளுநரின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ளது. அவரது ஊடகப் பிரிவு அனுப்பிவைத்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: வடமாகாணத்தின் பல பாடசாலைகளின் பழைய மாணவர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள்...

தமிழர்களின் பிரச்சினைகளை தூர்ந்துபோகச் செய்ய முயற்சி – சி.வி.

தமிழர்களின் பிரச்சினைகளை இழுத்தடிப்பு செய்து தூர்ந்துபோகச் செய்வதற்கான நடவடிக்கைகளே தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார். அத்தோடு இலங்கைக்கு தொடர்ந்தும் கால அவகாசம் வழங்கப்படுவதனால் எந்தவித நன்மையும் தமிழ் மக்களுக்கு ஏற்படப்போவதில்லை என்றும் இதனால் மக்களின் பிரச்சினை தொடர்ச்சியாக இழுபறிக்கே செல்லும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண முன்னாள்...

இலங்கை மீதான புதிய தீர்மானத்தை போலித் தேசியவாதிகள் எதிர்க்கின்றனர் – சுமந்திரன்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மீது புதியதொரு தீர்மானம் கொண்டுவரப்படக்கூடாது என போலித் தேசியவாதிகள் கூறி வருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அத்தோடு அத்தகைய சதிப்பொறிக்குள் தமிழ் மக்கள் சிக்கிக்கொள்ளக் கூடாது எனவும் அவர் கூறியுள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது மேலும்...

பொலிஸார் மீது தாக்குதல் – ஐவர் கைது

யாழ்.நகரை அண்டியுள்ள அரியாலை கிழக்கு பகுதியில் மணல் கடத்தல் நடவடிக்கையினை முறியடிக்க சென்ற அதிரடிப்படையினருக்கும், மணல் கடத்தல்காரா்களுக்கும் இடையில் தர்க்கம் மூண்டுள்ளது. மோதலையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற யாழ்ப்பாணம் பொலிஸார், சிறப்பு அதிரடிப்படையினரின் கடமைக்கு இடையூறு விளைவித்தனர் என்ற குற்றச்சாட்டில் 2 பெண்கள் உட்பட 5 பேரை கைது செய்தனர் என்றும் பொலிஸார் கூறினர். அரியாலை...

மாற்றுத் தலைமையுடன் வலுவான அணி தேர்தலில் களமிறங்கும் – சுரேஸ்

பல கட்சிகள் இணைந்ததான ஒரு புதிய கூட்டு உருவாக்கப்பட்டு மாற்றுத்தலைமையுடன் கூடிய வலுவான அணியொன்று கட்டியமைக்கப்படுமென ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இந்த அணி, வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளருமான சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் அமைக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். மாற்றுத் தலைமை குறித்து ஊடகங்களுக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை)...

யுத்தத்தின் பின்னரே இராணுவம் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டது: பொன்சேகா

யுத்தத்தின் பின்னரே இராணுவம் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “யுத்தம் இடம்பெற்றபோது இராணுவத்தினர் சட்டவிரோத குற்றங்களிலோ, மனித உரிமை மீறல் செயற்பாடுகளிலோ ஈடுபடவில்லை. யுத்த காலத்தில் அவ்வாறான செயற்பாடுகளுக்கு இராணுவத்...

6 மாதங்களில் கிளிநொச்சி மைதானம் சுகததாச போன்று மாறும் – அமைச்சர் உறுதி

6 மாதங்களுக்குள் சுகததாச உள்ளரங்கு போன்று வெளிச்சமூட்டிய விளையாட்டரங்கொன்றை அமைத்து தருவதாக தொலைத்தொடர்புகள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ வாக்குறுதியளித்தார். இங்குள்ள வீர வீராங்கனைகள் சாதனையாளர்களாக மாறுவதற்கு இந்த விளையாட்டரங்கு உதவியாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். கிளிநொச்சியில் அமைக்கப்பட்ட வட. மாகாண விளையாட்டுக்கள் கட்டிட தொகுதி மக்களின் பாவனைக்கநேற்று (ஞாயிற்றுக்கிழமை) கையளிக்கப்பட்டது....

நாட்டின் பல இடங்களில் 100 மி.மீ. அளவான பலத்த மழைவீழ்ச்சி – மக்கள் அவதானம்

நாட்டின் பல மாவட்டங்களில் இன்றும் நாளையும் இடியுடன் கூடிய மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக மேல், சப்ரகமுவ, மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ. அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக அத்திணைக்களம் தெரிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு...

மானிப்பாய் பொலிஸ் நிலையம் அமைப்பதற்காக தனியார் காணிகள் சுவீகரிப்பு

மானிப்பாய் பகுதியில் பொலிஸ் நிலையம் அமைக்கவென தனி நபர்களுக்கு சொந்தமான காணிகளை சுவீகரிப்பதற்கான அறிவித்தல், காணி உரிமையாளர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. பிரதேச செயலகம் ஊடாக இந்த அறிவித்தல் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. மானிப்பாய் பொலிஸ் நிலையத்தை சூழவுள்ள 6 தனி நபர்களுக்கு சொந்தமான 16 பரப்பு கொண்ட காணிகளை கடந்த 24 வருடத்திற்கு மேலாக பொலிஸார் கையகப்படுத்தி வைத்துள்ளனர். அக்காணிகளை...

ஈழத்தமிழர்களுக்கு நீதி கோரும் எழுச்சி பேரணி யாழில் ஆரம்பம்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு கால அவகாசம் வழங்கக்கூடாது, சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, யாழ். பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் ஊடாக ஆர்ப்பாட்டப் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த பேரணி இன்று (சனிக்கிழமை) சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளரது. யாழில் ஆரம்பமாகியுள்ள இந்த பேரணி, முற்றவெளி வரை செல்லவுள்ளது. அங்கு மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்று...
Loading posts...

All posts loaded

No more posts