போலி உறுதி முடித்து காணி விற்பனை – யாழ் மக்களுக்கு எச்சரிக்கை

யாழில் போலி ஆவணங்கள் தயாரித்து காணிகள் விற்கப்படும் சம்பவங்கள் நடைபெற்று வருவதாகவும் இந்த விடயம் தொடர்பாக விழிப்பாக இருக்குமாறு யாழ்.மாவட்ட செயலகம் எச்சரித்துள்ளது. காணிகளுக்கு போலி உறுதிகள் முடித்து காணிகள் விற்கும் செயற்பாடுகள், வெளிநாடுகளில் நீண்ட காலமாக வசித்து வருவோரின் காணிகளை கையகப்படுத்தல் போன்ற செயற்பட்டுகள் அதிகரித்துள்ளன. அவ்வாறு கையகப்படுத்தும் காணிகளை குறைந்த விலைகளுக்கு விற்பனை...

22 ஆயிரம் பட்டதாரிகளுக்கு அரச உத்தியோகம் – பிரதமர் உறுதி

நாட்டில் 22 ஆயிரம் பட்டதாரிகள் விரைவில் அரச சேவைக்குள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியமர்வு, புனர்வாழ்வு, வடமாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சினால் இதற்கான ஆட்களை இணைக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்படவுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். வடக்கு கிழக்கு அபிவிருத்தி பணிகளை துரிதப்படுத்துவதற்காக பனை...
Ad Widget

நீராவியடி பிள்ளையார் கோயில் விவகாரம் – ஊடகவியலாளர் குமணன் மீது பொலிஸ் தாக்குதல்

முல்லைத்தீவு ஊடகவியலாளர் குமணன் மீது தாக்குதல் நடாத்தி இனவாத கருத்துக்களாலும் தகாத வார்த்தைகளாலும் கொக்கிளாய் மற்றும் முல்லைத்தீவு பொலிஸ் பொறுப்பதிகாரிகள் பேசி அச்சுறுத்தியுள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று (திங்கட்கிழமை) மாலை இடம்பெற்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. செம்மலை பிள்ளையார் கோவில் பெயர் பலகை நீக்கப்பட்டமையை கண்டித்து, பெயர் பலகையை மீள நாட்ட நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) அப்பகுதி...

குருணாகல் மருத்துவர் மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுக்கள்!!

சந்தேகத்துக்கு இடமான வகையில் சொத்துத்துக்களைச் சேர்த்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட குருணாகல் போதனா வைத்தியசாலை மருத்துவர் சேகு சியாப்தீன் மொகமெட் சாபி, சட்டவிரோதமாக கருத்தடை சத்திரசிகிச்சை செய்தார் என பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். மருத்துவர் சேகு சியாப்தீன் மொகமெட் சாபி, சட்டவிரோதமாக சுமார் 4 ஆயிரம் சிங்களப் பெண்களுக்கு குடும்பக்கட்டுப்பாட்டு...

கிளிநொச்சியில் பிரபல பாடசாலைகளில் இன்று விசேட சோதனை

கிளிநொச்சி மகாவித்தியாலயம் உள்ளிட்ட பிரபல பாடசாலைகளில் இன்று விசேட சோதனைகள் இடம்பெற்றன. காவல்துறையினரும் படையினரும் இணைந்து குறித்த சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தனர். இன்று காலை கிளிநாச்சி மகாவித்தியாலயத்தில் இவ்வாறு சோதனைகள் முன்னெடுக்கப்பட்டதுடன், பலத்த பாதுகாப்பு கடமைகளிலும் காவல்துறையினர் மற்றும் படையினர் ஈடுபட்டதுடன் பாடசாலை சூழல் மோப்ப நாய்களைக் கொண்டு தேடுதலும் மேற்கொள்ளப்பட்டது, இதேவேளை வழமைபோன்று பாடசாலை...

வடக்கில் மட்டும் மோசமான சோதனை நடவடிக்கை எதற்காக? மாவை

அவ­ச­ர­கால சட்­டத்தின் கீழ் வடக்கில் நடக்கும் மோச­மான சோதனை செயற்­பா­டு­களை ஒரு­போதும் ஏற்றுக்­கொள்ள முடி­யாது. தென்­னி­லங்­கையை விடவும் வடக்கில் இவ்­வாறு மோச­மான சோத­னைகள் இடம் பெ­று­கின்­ற­மைக்­கான காரணம் என்ன என சபையில் தமிழ் தேசிய கூட் ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மாவை சேனா­தி­ராஜா, கேள்வி எழுப்­பினார். அவ­ச­ர­கால சட்­டத்தை நீடிக்கும் ஜனா­தி­ப­தியின் யோச­னைக்கு வன்­மை­யான கண்­ட­னத்­தையும்...

வவுனியாவில் முச்சக்கரவண்டி சாரதி மீது தாக்குதல்!

வவுனியா பட்டானீச்சூர் பகுதியில் முச்சக்கரவண்டி சாரதி மீது மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞனொருவர் தாக்குதல் மேற்கொண்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த முச்சக்கரவண்டி பட்டானீச்சூர் பகுதியினை அண்மித்த சமயத்தில், முச்சக்கரவண்டியினை பின்தொடர்ந்து வந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன், முச்சக்கரவண்டி முன்பாக மோட்டார் சைக்கிளினை நிறுத்தி சாரதி மீது...

பாதுகாப்பு என்ற போர்வையில் அப்பாவி மக்களைத் துன்புறுத்த வேண்டாம் – சம்பந்தன்

பாதுகாப்பு என்ற போர்வையில் அப்பாவி மக்களைத் துன்புறுத்த வேண்டாம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முப்படைத் தளபதிகள் மற்றும் பதில் பொலிஸ்மா அதிபர் ஆகியோரிடம் நேரில் வலியுறுத்தியுள்ளார். அத்தோடு, பயங்கரவாதச் சட்டம் மற்றும் அவசரகாலச் சட்ட விதிகளைப் பயன்படுத்தி அவர்களைக் கைதுசெய்ய வேண்டாம் என்றும் உண்மையான குற்றவாளிகள் மற்றும்...

ஆவா குழுவினர் திருந்திவிட்டனர் – பிரதி பொலிஸ்மா அதிபர்

“யாழ்ப்பணத்தில் வாள்வெட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த ஆவா குழுவைச் சேர்ந்த இளைஞர்கள் தற்போது திருந்தி சமூகத்தில் நல்லவர்களாக வாழ்ந்து வருகின்றனர். அவர்களைக் கட்டுப்படுத்திய பெருமையுடன் வடக்கில் இருந்து மாற்றலாகின்றேன்” இவ்வாறு வடக்கு மாகாண மூத்த பிரதி பொலிஸ் மா அதிபர் ரொசாந்த் பெர்ணான்டோ தெரிவித்தார். அழைக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் சிலரை அவர் தனது அலுவலகத்தில் சந்தித்த போதே...

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கொலை வழக்கு ஒத்திவைப்பு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் சுருக்கமுறையற்ற விசாரணைகள் தொடரில் நேற்று அரச தரப்புச் சாட்சியான காவல்துறை அலுவலகர் சாட்சியம் வழங்க முற்படுத்தப்பட்ட போதும் அவரால் முன்வைக்கப்பட்ட பிரித்தெடுக்கப்பட்ட சாட்சியின் பிரதி சிங்களமொழி மட்டுமே காணப்பட்டதால் அதன் தமிழ்மொழிப் பிரதியை சமர்ப்பிக்க உத்தரவிட்ட யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்....

கூட்டமைப்பு எதிர்ப்பு – அவசர காலச் சட்டம் நாடாளுமன்றில் நிறைவேறியது

அவசரகால சட்டத்தை அடுத்த மாதம் வரை நீடிப்பதற்கான நாடாளுமன்ற வாக்கெடுப்பு 15 வாக்குகளினால் பெரும்பான்மை பெற்றுள்ளது. இதனால் அடுத்தமாதம் வரை அவசரகால சட்டத்தை நீடிப்பதற்கு நாடாளுமன்றில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஏகமனதாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த பிரேரணைக்கு ஆதரவாக 22 வாக்குகளும் எதிராக 8 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இந்த வாக்கெடுப்பில் எதிர்க்கட்சி கலந்துகொள்ளவில்லை என்பதுடன் தமிழ்த் தேசியக்...

திருகோணமலையில் இந்து கோயிலின் அஸ்திவாரம் உடைப்பு!!

தொல்பொருள் திணைக்களத்தினரால் திருகோணமலை – கன்னியா வெந்நீரூற்று பகுதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் புனர்நிர்மாணப் பணிகளின்போது அங்கு காணப்பட்ட இந்துக்கோயிலின் அஸ்திவாரத்தை உடைத்து சிவன் ஆலயத்திற்கு அருகே இடிந்து வீழ்ந்துள்ள கிணற்றினை நிரப்பியதன் காரணமாக குறித்த பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. நேற்று இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக ஆராய குறித்த பகுதிக்கு இன்று (வெள்ளிக்கிழமை) விஜயம் செய்த மாவட்ட...

அவசரகால சட்டம் நீடித்தால் தமிழரின் பூர்வீகம் இராணுவம் வசமாகும்: கூட்டமைப்பு

அவசரகால சட்டம் நீடித்தால் தமிழர்களின் பூர்வீக நிலங்கள் இராணுவத்திற்கு சொந்தமாகும் நிலை ஏற்படும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். ஈஸ்டர் தின தாக்குதலை தொடர்ந்து அமுல்படுத்தப்பட்ட அவசரகால சட்டத்தை தொடர்ந்து ஒரு மாதக் காலத்திற்கு நீடிப்பது தொடர்பாக இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நாடாளுமன்ற விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இதனை...

யாழ்.போதனா வைத்தியசாலையில் நாளைமுதல் புதிய நடைமுறை!!

யாழ்.போதனா வைத்தியசாலையில் கடந்த மாசி மாதம் 14 ஆம் திகதி பிரதமர் ரணி்ல் விக்கிரமசிங்கவினால் திறந்து வைக்கப்பட்ட விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு (Accident and emergency unit with modern facilities) நாளை சனிக்கிழமை தொடக்கம் பொதுமக்களுக்கான சிகிச்சைகளை ஆரம்பிக்கவுள்ளது. எனவே விபத்து மற்றும் அவசர சிகிச்சைகளுக்காக வருபவர்கள் நாளை புதிதாக திறந்து...

பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்பு – 5 பேர் சற்றுமுன்னர் கைது

பயங்கரவாத தற்கொலைக்கு குண்டு தாக்குதலுடன் தொடர்புடைய மேலும் 5 பேர் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஐவரும் ஹொரவப்பொத்தனை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். அவர்கள் தற்கொலைத் தாக்குதல்களுடனும் நேரடி தொடர்பு கொண்டவர்கள் என்று சந்தேகம் எழுந்துள்ளதாகவும் இவர்கள் புலனாய்வுப் பிரிவுகளால் கிடைக்கப்பெற்ற தகவலினை அடுத்தே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர்...

நீர்கொழும்பில் வர்த்தக நிலையத்திற்கு தீ வைப்பு

நீர்கொழும்பு – கொச்சிக்கடை பிரதேசத்தில் 05 மாடிகள் கொண்ட வர்த்தக நிலையம் ஒன்றிற்கு இனந்தெரியாத சில நபர்களினால் தீ வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் நேற்று (வியாழக்கிழமை) மாலை இடம்பெற்றுள்ளதுடன், இதன் காரணமாக குறித்த கட்டடம் பாரியளவில் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த நீர்கொழும்பு நகரசபை தீயணைப்பு பிரிவினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்....

14 முஸ்லிம்களின் உயிரை போராடி காப்பாற்றி இலங்கையில் கதாநாயகியாக மாறிய சிங்கள பெண்!

கடந்த வாரம் வடமேல் மாகாணத்தில் இடம்பெற்ற இன வன்முறையின் போது 14 முஸ்லிம்களை காப்பாற்றிய சிங்கள பெண்ணொருவர் தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது. தும்மோதர, மெல்லகெலே பிரதேசத்தை சேர்ந்த சுஜீவன சந்திமான என்ற பெண்ணே இந்த வீரச் செயலை செய்துள்ளார். கடந்த 13ஆம் திகதி இடம்பெற்ற வன்முறையின் போது தும்மோதர, மெல்லகெலே பிரதேசத்தில் 500க்கு அதிகமான...

பாடசாலைக்கு அருகில் கிடந்த 13 கைக்குண்டுகள்!

கழுத்துறை மாவட்டம் பதுரலிய என்ற இடத்திலிருந்து 13 கைக்குண்டுகளை பொலிஸார் மீட்டுள்ளனர். குறித்த பகுதியிலுள்ள பாடசாலைக் கட்டிடம் ஒன்றிற்கு அருகில் இருந்த பொதி ஒன்றிலிருந்தே இவை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பாடசாலையின் காவலாளி வழங்கிய தகவலையடுத்து ஸ்தலத்திற்கு வந்த பொலிஸார் குறித்த பொதியில் கைக்குண்டுகள் இருப்பதைக்கண்டு அவர்றை மீட்டுச் சென்றனர். தற்போது அதுகுறித்த விசாரணைகளில் பொலிஸார்...

பிள்ளையார் கோயில் இடிக்கப்படுவதை ஹிஸ்புல்லா நிறுத்தாத பட்சத்தில் போராட்டம்!!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை அடுத்து நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள அச்சமான சூழ்நிலைகளை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு தமிழர் தாயகமாக வடக்கு கிழக்கிலுள்ள தமிழர்களின் வரலாற்று ஆதாரங்களை அழிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்திக்கின்றார். திருகோணமலை மாவட்டத்திலுள்ள தமிழர்களின் வரலாற்று ஆதாரங்களை அழிக்கும் நடவடிக்கையில் தொல்பொருள் திணைக்களம் ஈடுபட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ள சிவாஜிலிங்கம், வரலாற்றுச்...

மாணவர்களின் உணவை படையினர் கைகளால் சோதனையிடுகின்றனர் – பெற்றோர் கவலை

கிளிநொச்சியில் உள்ள பாடசாலை ஒன்றில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ள இராணுவத்தினர் , மாணவர்களின் உணவு வகைகளை கைகளால் சோதனையிடுவது தொடர்பில் பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளனர். பாடசாலைகளின் பாதுகாப்பையும் மாணவர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் நோக்குடன் , இராணுவத்தினர் சோதனை நடவடிக்கை எனும் பெயரில் மாணவர்களை தினமும் இம்சித்து வருவதாக குற்றசாட்டுக்கள் எழுந்துள்ளன. மாணவர்கள் , ஆசிரியர்கள்...
Loading posts...

All posts loaded

No more posts