கரவெட்டி பிரதேச சபை தலைவர் ஐங்கரன் தங்கவேலாயுதம் மீது தாக்குதல்!

கரவெட்டி பிரதேச சபை தலைவர் ஐங்கரன் தங்கவேலாயுதம் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கரவெட்டி பிரதேச சபை எல்லைக்குட்ப்பட்ட நெல்லியடிப் பகுதியில் காணிப் பிணக்கு ஒன்று தொடர்பாக பார்வையிடச் சென்ற வேளை, நேற்று(வியாழக்கிழமை) இவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக நெல்லியடிப் பொலிஸார் தெரிவித்தனர். தலையில் காயங்களுக்கு உள்ளான கரவெட்டி பிரதேச சபை தலைவர் நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில்...

சுரேன் ராகவன் இரணைமடு விவசாய சம்மேளன உறுப்பினர்களை சந்தித்தார்!

நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் கிளிநொச்சி இரணைமடு விவசாய சம்மேளன உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடினார். குறித்த சந்திப்பு நேற்று (புதன்கிழமை) பிற்பகல் 5 மணியளவில் இரணைமடு விவசாய சம்மேளன கட்டடத்தில் இடம்பெற்றது. வடக்கு மாகாண ஆளுநராக இருந்த காலம் தொட்டு இரணைமடு விவசாய சம்மேளனத்தினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் சுரேன் ராகவனின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு...
Ad Widget

யாழ்.பல்கலைக்கழகத்தில் சமூக வலைத்தளங்கள் ஊடாக பகிடிவதை!! ; விசாரணை ஆரம்பம்!

யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் மாணவர்கள் சிலருக்கு சமூக வலைத்தளங்கள் ஊடாக முன்னெடுக்கப்படுகின்ற பகிடிவதைகள் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கேஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்கள் தொடர்பான ஊடக சந்திப்பில் கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். யாழ். பல்கலைகழகத்தில் முகாமைத்துவ பீடத்தின் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் whatsapp சமூக வலைத்தளங்கள்...

பிரதேச சபைச் செயலாளர் மீது தாக்குதல் – தாக்குதல் நடத்தியவருடன் இணக்கமாகச் செல்ல பொலிஸார் அழுத்தம்

நல்லூர் பிரதேச சபையின் செயலாளர் எஸ்.சுதர்சன் மீது ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ளார். தாக்குதல் நடத்தியவருடன் இணக்கமாகச் செல்லுமாறு கோப்பாய் பொலிஸார் பிரதேச சபைச் செயலாளருக்கு அழுத்தம் வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தச் சம்பவம் இன்று முற்பகல் 10 மணியளவில் இடம்பெற்றது. நல்லூர் அரசடியைச் சேர்ந்த ஒருவர், திருநெல்வேலி சந்தை தொகுதியில் உள்ள கடை தொடர்பில் பிரதேச சபைச்...

வன்முறைக் கும்பலுக்குள் வாள்வெட்டுத் தாக்குதல்! ஒருவர் படுகாயம்!!

வன்முறைக் கும்பலைச் சேர்ந்த விக்டர் சுந்தர் மீது மற்றொரு கும்பலால் வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கால்கள் மற்றும் கைகளில் படுகாயமடைந்த விக்டர் சுந்தர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் இன்று காலை 7 மணியளவில் யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம், நாயன்மார்க்கட்டு பகுதியைச் சேர்ந்த விக்டர் சுந்தர்,...

முகமாலையில் சீருடைகள், எலும்பு துண்டுகள் மீட்பு!

கிளிநொச்சி முகமாலை பகுதியில் சீருடைகள், கால் பகுதி எலும்பு துண்டுகள், பற்றிகள் என்பன மீட்கப்பட்டுள்ளன. குறித்த பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டு வரும் ஊழியர்களினால் இவை அடையாளம் காணப்பட்டு பளை பொலிசாருக்கு நேற்று(புதன்கிழமை) தகவல் வழங்கப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பான விசாரணைகளை பளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

சர்வதேச நாடுகளில் பட்டம் பெற்றவர்களை அரச சேவையில் இணைத்துக்கொள்ள தீர்மானம்

சர்வதேச நாடுகளில் பட்டம் பெற்ற மாணவர்களை அரச சேவையில் இணைத்துக்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் நாயகம் எப்.ஜே.ரத்னசிறி தெரிவித்துள்ளார். அதற்கமைய குறித்த பட்டதாரிகளிடம் இருந்து 4,100 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு அமைய அவர்களை அரச சேவையில் உள்ளீர்க்க தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதனடிப்படையில்...

பாடசாலைகளின் அதிபர்களுக்கு முக்கிய பணிப்புரை விடுத்தார் ஜனாதிபதி!

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் உயர் அரச அதிகாரிகளின் பெயர்களை குறிப்பிட்டு பாடசாலைகளுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளுமாறு முன்வைக்கப்படும் வேண்டுகோள்களை தயங்காது நிராகரிக்குமாறு அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின், ஜனாதிபதி அலுவலக அதிகாரிகளின், பிரதமரின், பிரதமரின் அலுவலக அதிகாரிகளின் மற்றும் ஏனைய உயர் அரச அதிகாரிகளின்...

சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை தொடர்ந்தும் கடைப்பிடியுங்கள் – சகல பாடசாலைகளுக்கும் அறிவிப்பு

கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்புப்பெற சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை தொடர்ந்தும் முழுமையாக கடைப்பிடித்து பாடசாலை நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கல்வி அமைச்சினால் சகல பாடசாலைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ள சுற்றறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “கொரோனா தொற்று அச்சம் காரணமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் தற்போது அனைத்து மாணவர்களுக்கும்...

இது ஒரு துன்பியல் சம்பவம் – டெனீஸ்வரனுடனான வழக்கு குறித்து விக்கினேஸ்வரன்!

இது ஒரு துன்பியல் சம்பவம். தரப்பாருக்கு இடையே புரிந்துணர்வு இல்லாமையால் இதுவரையில் இவ்விடயம் தாமதிக்கப்பட்டு வந்துள்ளது என வடமாகாண முன்னாள் முதலமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். [caption id="attachment_105059" align="aligncenter" width="720"] sdr[/caption] டெனிஸ்வரன் தொடர்ந்த வழக்கு நேற்று(புதன்கிழமை) முடிவுகள் வந்ததன் பின்னர் நீதிமன்ற வளாகத்தில் காத்திருந்த ஊடகவியலாளர்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர்...

கடும் எச்சரிக்கையின் பின் சிவாஜிலிங்கம் பிணையில் விடுவிப்பு!!

“நீதிமன்றத் தடை உத்தரவையும் மீறி தியாக தீபம் திலீபனுக்கு நினைவேந்தல் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கத்துக்கு கடும் எச்சரிக்கையின் பின் பிணை வழங்கி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன், அவருடன் கைது செய்யபட்ட வாடகைக்கு அமர்த்தப்பட்ட முச்சக்கர வண்டிச் சாரதியும் பிணையில் விடுவிக்கப்பட்டார். ” உங்களுக்கு...

வெடுக்குநாரி செல்ல அனுமதி – தொல்லியல் திணைக்களத்தின் வழக்கு தள்ளுபடி!

வெடுக்குநாரி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு சென்று வழிபாடுகளை மேற்கொள்வதற்கு வவுனியா நீதிமன்று அனுமதி வழங்கியுள்ளது. நெடுங்கேணி பொலிஸ் மற்றும் தொல்லியல் திணைக்களத்தால் ஆலயத்திற்கு செல்வதற்கு தடை விதிக்க கோரி, வவுனியா நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட குறித்த வழக்கினை தள்ளுபடி செய்த மன்று, ஆலய உற்சவத்தை வழமை போன்று நடத்த அனுமதி வழங்கியதுடன், ஆலய நிர்வாகத்திற்கு இடையூறோ, அச்சுறுத்தலோ...

பட்டதாரி பயிலுனர் நியமனம் – மேன்முறையீடுகளை பரிசீலிக்க குழு நியமனம்

அரச சேவையில் பயிலுனர் பட்டதாரிகளை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைளில் நியமனம் வழங்கப்படாத பட்டதாரிகளின் மேன்முறையீடுகளை பரிசீலிக்கும் நடவடிக்கை இன்று(புதன்கிழமை) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன. அரச ​சேவை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் J.J. ரத்னசிறி இதனைத் தெரிவித்துள்ளார். மேன்முறையீடுகளை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை நேற்றுடன் நிறைவடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த மேன்முறையீடுள் விசேட குழுவினால் பரிசீலிக்கப்படவுள்ளதாகவும் அவர்...

பிரபாகரனின் முடிவினால் திலீபன் உண்ணாவிரம் இருக்கவில்லை – கமால் குணரட்ணவின் கருத்திற்கு ஐங்கரநேசன் பதிலடி

திலீபன் உண்ணாவிரதம் இருந்தமை தலைவர் பிரபாகரனின் முடிவோ தெரிவோ அல்ல என்றும் அவர் சுயமாகவே இந்த முடிவை எடுத்துத் தலைவரிடம் அதற்கானஒப்புதலைப் பெற்றிருந்தார் என்றும் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். திலீபன் ஒரு அரசியற் போராளி என்றும் அவர் நோயாளி அல்ல என தெரிவித்த ஐங்கரநேசன் நல்ல தேக ஆரோக்கியத்துடனேயே...

வடக்கு – கிழக்கில் அரசின் ஜனநாயக மீறல்களுக்கு எதிராக கட்சிகளுடன் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு கூட்டமைப்பு தீர்மானம்!!

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் புதிய அரசின் ஜனநாயக மீறல் செயற்பாடுகளுக்கு எதிராக ஒன்றிணைந்து செயற்படுவதற்கான தீா்மானம் ஒன்றை எடுக்கவுள்ளதாக கூறியிருக்கும் தமிழ்தேசிய கூட்டமைப்பு, எதிா்வரும் வெள்ளிக்கிழமை தமிழ் தேசிய நிலைப்பாட்டில் இயங்கும் கட்சிகள் மற்றும் அமைப்புக்களுடன் இணைத்து இந்த தீா்மானம் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது. தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்கப்பட்டமை மற்றும்...

இயற்கை அனர்த்தம் காரணமாக அழிவடையும் விவசாய நடவடிக்கைகளுக்கு நஸ்டஈடு – அமைச்சர் மஹிந்தானந்த

வாழை தோட்டம்,பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம், உழுந்து, கஜீ, பப்பாசி போன்ற பயிர் செய்கைகள் இயற்கை அனர்த்தம் காரணமாக அழிவடையும் போது நஸ்டஈடு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்றையதினம் (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ‘சுபீட்சத்தின் நோக்கில் விவசாய மறுமலர்ச்சி’ எனும் தொனிப் பொருளிலான கலந்துரையாடலில் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த...

பருத்தித்துறை வியாபாரி மூலையில் கத்திக் குத்து – ஒருவர் உயிரிழப்பு!

பருத்தித்துறை வியாபாரி மூலையில் கத்திக் குத்துக்கு இலக்காகிய ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று மந்திகை ஆதார வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன. பருத்தித்துறை வியாபாரி மூலையில் நேற்று(செவ்வாய்கிழமை) மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றது என்று பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர். அதே இடத்தைச் சேர்ந்த கணேசலிங்கம் நடேசலிங்கம் (வயது -39) என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். அவரை கத்தியால் குத்தி...

வெடுக்குநாரி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்திற்குள் செல்லவேண்டாம்!! – தொல்பொருள் திணைக்களம் எச்சரிக்கை!

ஆலயத்திற்கு செல்வதோ பூசைகள் செய்வதோ முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது. மீறி செயற்பட்டால் நிர்வாகத்தினர் கைதுசெய்யப்படுவார்கள் என நெடுங்கேணி பொலிஸார் தெரிவித்துள்ளதாக வெடுக்குநாரி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். இது தொடர்பாக மேலும் அவர்கள் தெரிவிக்கையில்… வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய வருடாந்த உற்சவம் நாளை(வியாழக்கிழமை) ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியாகியிருக்கின்றது. இந்நிலையில் ஆலய திருவிழாவினை தடுத்து...

கொரோனா வைரஸ் தொற்று: பொதுமக்களுக்கு சுகாதார அமைச்சர் முக்கிய அறிவிப்பு

பொதுமக்கள் தொடர்ந்தும் சுகாதார அலோசனைகளை பின்பற்றுவதன் ஊடாகவே, கொரோனா சவாலில் இருந்து முழுமையாக வெற்றியடைய முடியும் என சுகாதார அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சி தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த நிகழ்வில் பவித்ராதேவி வன்னியாராச்சி மேலும் கூறியுள்ளதாவது, “நாட்டுக்குள் கொரோனா தொற்று இல்லை. 100 நாட்களுக்கும் மேலாக சமூகத்தொற்று இல்லாமல்...

தியாக தீபம் திலீபனின் நினைவுத்தூபியை திருத்த வேண்டாம்!!

யாழ். ஆவரங்கால் பகுதியில் இந்திய இராணுவத்தினரின் காலத்தில் சேதமாக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்ட நிலையில் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியை, மீள புனர்நிர்மாணம் செய்து அமைப்பதற்கு சிலர் முன்வந்திருந்த நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த ஒருசிலர் இணைந்து அதற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். தமது பிரதேசத்துக்கு இந்தத் தூபி தேவையில்லை என்றும், அதனால், ஏற்கனவே ஒருவர் கொல்லப்பட்டுள்ளனர் எனவும்...
Loading posts...

All posts loaded

No more posts