- Saturday
- August 2nd, 2025

முல்லைத்தீவைச் சேர்ந்த மூன்று மீனவர்கள் இன்று காலை முதல் முல்லை. மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். (more…)

வலிகாமம் கல்வி வலயப் பாடசாலைகளில் மும்மொழிக் கொள்கைத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வலிகாமம் கல்வி வலய கல்விப் பணிப்பாளர் எஸ்.சந்திரராசா தெரிவித்துள்ளார். (more…)

இலங்கை வைத்தியசாலைகளில் நோயாளர்களுக்கு வழங்கப்படும் மருந்துப் பொருட்கள் பலவும் தரம் குறைந்தவை என சுகாதார சேவை தொழிற்சங்க சம்மேளன முன்னணி குற்றஞ்சுமத்தியுள்ளது. (more…)

நல்லூர் - செம்மணி வீதியில் குடித்து விட்டு கும்மாளம் போட்ட யாழ் பல்கலைக்கழக சட்ட பீட சிங்கள இன மாணவர்கள் இருவர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இனந் தெரியாத நபர்கள் கடுமையாகத் தாக்கியுள்ளார்கள். (more…)

வலிகாமம் கல்வி வலயத்தில் இருந்து 2013ஆம் ஆண்டு க.பொ.த சாதாணதர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் பெறுபேற்று அடைவு மட்டத்தை அதிகரிக்கும் வகையில் பாடரீதியான செயல் திட்டத்தை வலிகாமம் கல்வி வலயம் மேற்கொண்டுள்ளது' என வலிகாமம் வலய கல்விப் பணிப்பாளர் எஸ்.சந்திரராசா தெரிவித்தார். (more…)

யாழ்.போதனா வைத்தியசாலையில் பிரசவ விடுதிகளில் அவர்களது உறவினர்கள் சென்று பார்வையிடுவதற்கு பாஸ் நடைமுறை அமுல்படுத்தப்பட்டுள்ளதால் தூரப் பிரதேசங்களில் இருந்து வரும் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது. (more…)

யாழ். மாணவர்களுக்கு இந்திய கல்வியைத் தொடர புலமைப்பரிசில் வழங்கப்படவுள்ளதாக யாழ் இந்தியத் துணைத்தூதரகம் அறிவித்துள்ளது. (more…)

இருபாலையில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். (more…)

அரியாலைப் பகுதியில் சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுதலையாகியுள்ளனர். (more…)

சுன்னாகம் நகர மத்தியிலுள்ள இராணுவத்தினர் தாம் தங்கியுள்ள பொதுமக்களின் வீடுகளிலிருந்து இம்மாத இறுதியில் வெளியேறவுள்ளதுடன், பொது மக்களது வீடுகளையும், உரிமையாளர்களிடம் கையளிக்கவுள்ளதாக அப்பகுதி கிராம அலுவலர் தெரிவித்துள்ளார். (more…)

மாகாண முகாமைத்துவ உதவியாளர் சேவையின் வகுப்பு III இற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப்பரீட்சையின் பெறுபேறுகளுக்கமைவாக மாவட்ட அடிப்படையில் நேர்முகத்தேர்விற்கு தெரிவுசெய்யப்பட்டவர்களுடைய கையடக்க தொலைபேசிக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல்கள் பரிமாறப்பட்டுள்ளது. (more…)

வட இலங்கையில் இராணுவ பிரசன்னம் அதிகரித்திருப்பதனால் கொமன்வெல்த் அல்லது ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்களை வரவழைக்க தேர்தல்கள் ஆணையாளரோ அரசாங்கமோ இப்போதே (more…)

யாழ்ப்பாணத்தில் போதை மருந்துகள் கிடைக்காத காரணத்தினால் 21 வயது இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். (more…)

தமிழர்களுக்கான தீர்வு சமஷ்டி ஆட்சியின் மூலம் கிடைக்குமே தவிர தனிநாட்டுக் கோரிக்கை தமிழர்களுக்கு தீர்வாக அமையாது' என தமிழரசு கட்சியின் சிரேஷ்ட உபதலைவர் சி.க.சிற்றம்பலம் தெரிவித்தார். (more…)

மக்களின் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டுமென்று தான் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துவதாக நேபாளத்தின் முன்னாள் பிரதமரும் கம்யூனிஸ்ட் கட்சியின் சிரேஷ்ட தலைவருமான மாதேவ் குமார் தெரிவித்தார். (more…)

நெடுந்தீவு போக்குவரத்து சேவையில் ஈடுபட்டு பழுதடைந்த நிலையில் காணப்பட்ட குமுதினிப் படகு மீண்டும் நெடுந்தீவுக்கான போக்குவரத்து சேவையில் கடந்த 05ஆம் திகதி முதல் இணைக்கப்பட்டுள்ளது. (more…)

திருநெல்வேலிச் சந்தை வியாபாரிகளின் பணப் பைகள் தொடர்ந்து திருட்டுப் போகும் சம்பவங்களினால் வியாபாரிகள் தமது வியாபாரத்தைப் பார்ப்பதா அன்றி தமது பணப்பைகளை பாதுகாப்பதா என்று தெரியாது பெரும் திண்டாட்டமான நிலமையில் காணப்படுகின்றார்கள். (more…)

மருதனார்மடம் சந்தை சைக்கிள் பாதுகாப்பில் விடப்பட்ட புதிய சைக்கிள் காணாமல்போனமை சம்பந்தமாக சுன்னாகம் பொலிஸாரினால் சைக்கிள் பாதுகாப்பு கடமை ஊழியர் விசாரணைக்காக நேற்று பகல் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். (more…)

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் ஒளித்தெறிப்பு இல்லாத சைக்கிள்களுக்கு ஒளித்தெறிப்பு தாள்களை ஒட்டும் நடவடிக்கையை யாழ். பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பொலிஸார் சனிக்கிழமை மேற்கொண்டுள்ளனர். (more…)

All posts loaded
No more posts