பாரிய திருட்டுடன் சம்பந்தப்பட்ட ஒருவர் கைது! திருட்டு பொருட்களும் மீட்பு

யாழ்.குடா நாட்டில் நடைபெற்ற 86 களவுகளுடன் தொடர்புடைய ஒருவர் கடந்த 25 ஆம் திகதி மானிப்பாய் மற்றும் புதுக்குடியிருப்பு பொலிஸாரும் இணைந்து புதுக்குடியிருப்பில் வைத்து கைது செய்துள்ளனர். (more…)

விழிப்புலன் இழந்தவர்களை ஏற்றமறுக்கும் பேருந்துகள் : முதலமைச்சரிடம் முறைப்பாடு

பார்வையிழந்தவர்களின் குடும்பங்கள் பொருளாதார ரீதியில் பல பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளது. அவர்களின் குடும்பங்களிற்கு வடக்கு மாகாணசபை மானிய உதவிகளை வழங்க வேண்டும் அல்லது கடன் அடிப்படையிலாவது உதவிகளை வழங்க வேண்டுமென (more…)
Ad Widget

இலங்கை மீன்களுக்கு ஐரோப்பாவில் தடை வருகிறது

உலகெங்கும் சட்டவிரோதமான வகையில் மீன்பிடித் தொழிலை எதிர்த்து போராடும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இலங்கையிலிருந்து மீன்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கும் ஒரு பிரேரணையை ஐரோப்பிய ஒன்றியம் முன்னெடுத்துள்ளது. (more…)

எபோலாவைக் கட்டுப்படுத்த பேஸ்புக் நிறுவுநர் உதவி

கொடிய உயிர்க்கொல்லி நோயான எபோலாவை கட்டுபடுத்த போராடும் நாடுகளுக்கு பேஸ்புக் நிறுவுநர் மார்க் ஷுக்கர் பெர்க் ரூ.150 கோடி நிதி உதிவி அளிக்க போவதாக அறிவித்துள்ளார். (more…)

காங்கேசன்துறை வெளிச்சவீடு பாதுகாப்புச் செயலாளரால் திறந்து வைப்பு

புதுப்பிக்கப்பட்ட காங்கேசன்துறை வெளிச்சவீடு அண்மையில் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்பட்டது. (more…)

வெளிநாட்டவர் வடக்கிற்கு செல்ல பாதுகாப்பு அமைச்சின் அனுமதி வேண்டும்

வெளிநாட்டவர் வட மாகாணத்துக்கு செல்லவேண்டுமாயின் அதற்கு பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் அனுமதியை பெறவேண்டும் என இராணுவப்பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்துள்ளார். (more…)

யாழ். இந்து மாணவன் கொலை; இரு சந்தேக நபர்கள் கைது!

யாழ். இந்துக் கல்லூரியில் கல்வி பயின்று பல்கலைக்கழகத்துக்குத் தெரிவான மாணவன் ஒருவரை இணுவிலில் அவரது வீட்டில் வைத்துக் கோடரியால் கொத்திக் கொலை செய்தமை தொடர்பில் ஒன்றரை வருடங்களின் பின்னர் இரு சந்தேக நபர்களைப் பொலிஸார் கைது செய்தனர். (more…)

பலசரக்கு கடை தீக்கிரை

யாழ்ப்பாணம், கைதடி வடக்கு பகுதியில் அமைந்துள்ள பலசரக்குக் கடையொன்று செவ்வாய்க்கிழமை (14) இரவு தீக்கிரையாகியுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர். (more…)

வாள்களுடன் இருவர் கைது

குழு மோதலொன்றுக்காக வாள்களை முச்சக்கரவண்டியில் கொண்டுசென்ற இரு சந்தேகநபர்களை வல்வெட்டித்துறை நகர பகுதியில் வைத்து செவ்வாய்க்கிழமை (14) இரவு கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர். (more…)

மு.அ. டக்ளஸ் தேவானந்தா என்றால் முதுகெலும்பிலா அடிமை என்ற அர்த்தத்தில் கூறவில்லை! சிறிதரன் கிண்டல்

மு.அ. டக்ளஸ் தேவானந்தா என்றால் முதுகெலும்பில்லாத அடிமை என்று நான் சொல்ல வரவில்லை. முக்கிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா என்றே கூறுகின்றேன். (more…)

புலிகள் வற்புறுத்தி பெற்ற தங்கத்தையும் வழங்க ஏற்பாடு செய்யவும் – சங்கரி

விடுதலைப் புலிகளிடம் அடைவு வைத்த தங்க நகைகளை, வட்டியும் முதலும் அறவிடாமல் சொந்தக்காரர்களிடம் கையளித்தமையை, பாராட்டும் அதேவேளை புலிகளால் வற்புறுத்தி பெறப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் தரவேண்டிய மூன்று பவுண் தங்கத்தையும் கையளிக்க நடவடிக்கை (more…)

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் இரத்ததானம்

உலக ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் ஆசிரிய மாணவர்கள் இரத்ததான முகாம் ஒன்றினை இன்று ஏற்பாடு செய்துள்ளனர். (more…)

தமிழீழ வங்கிகளில் நகைகளை அடகு வைத்தோர் ஆதாரங்களுடன் விண்ணப்பிக்குமாறு இராணுவம் வேண்டுகோள்

புலிகளிடம் இருந்து மீட்கப்பட்ட வடபகுதி மக்களின் நகைகளை உரிமையாளர்களிடம் கையளிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. (more…)

யாழ்.பல்கலையில் உளவியல் கண்காட்சி

உளநல வாரத்தை முன்னிடடு “உளவியல் கண்காட்சி" ஒன்று யாழ்.பல்கலைக்கழக புதிய கலைப்பீட கட்டடத் தொகுதியில் இன்று காலை 9 மணியளவில் ஆரம்பமாகியது. (more…)

“மச்சி ஒரு குவார்ட்டர் சொல்லேன்” -சூப்பர் ஸ்டார் கேட்கிறார் !!!

தலைமுறை தாண்டி தனக்கென்று தனியிடத்தை ரசிகர்களின் இதயங்களில் கொண்டவர், இன்றும் சூப்பர்ஸ்டார் ஆக தமிழ்சினிமாவில் வலம் வருபவர் ரஜினிகாந்த். அரசியலிலும் கூட ஒரு ரவுண்ட் வரவிருக்கிறார் என்பது மேலதிக தகவல். (more…)

யாழ்ப்பாண திரையரங்கில் வெளியாகிறது இலவு குறும்படம்.

கிருத்திகன் ஜனனி நடிப்பில் கானா வரோ இயக்கத்தில் ரோஷன் நிரோஷ் ஒளிப்பதிவில் தர்சனன் இசையில் மாதவன் ஒளித்தொகுப்பில் விக்ரியேஷன் தயாரிப்பில் உருவான இலவு குறும் திரைப்படம் எதிர்வரும் 19ம் திகதி ஞாயிற்றுகிழமை யாழ்ப்பாணம் செல்லா திரையரங்கில் பிரம்மாண்டமான முறையில் வெளியாகவுள்ளது. (more…)

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து ஆரம்பவிழா

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் ஆரம்பவிழா மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றுள்ளது. இதில் சச்சின், அமிதாப்பச்சன், முகேஷ் அம்பானி, நீடா அம்பானி என, பாலிவுட், கிரிக்கெட் மற்றும் தொழிலதிபர்கள் பட்டாளம் பங்கேற்றது. (more…)

மெயில் ரயிலும் யாழ். வந்தது

24 வருடஙங்களின் பின்னர் முதன் முறையாக மெயில் கொழும்பு புறக்கோட்டையில் ரயில் இன்று காலை 7.15 மணியளவில் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தது. (more…)

ஜனாதிபதி தேர்தலை தீர்மானிக்கும் சக்தியயாக த.தே. கூட்டமைப்பு – பா.அரியநேத்திரன்

"ஜனாதிபதி தேர்தலை தீர்மானிக்கும் சக்தியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாறப்போகின்றது என்ற பயம் அரசை ஆட்டத்தொடங்கியுள்ளது. அதன் காரணமாக இப்போதே பணத்தைக் கொடுத்து பல 'சுப்பர் ஸ்ரார்களை' இறக்கியிருக்கின்றது அரசு." (more…)

ஜனாதிபதிக்கு முதலமைச்சர் சி.வி கடிதம்!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடந்துமுடிந்துள்ள இணை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புறக்கணித்திருந்த நிலையில், வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரன், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார். (more…)
Loading posts...

All posts loaded

No more posts