24 வருடஙங்களின் பின்னர் முதன் முறையாக மெயில் கொழும்பு புறக்கோட்டையில் ரயில் இன்று காலை 7.15 மணியளவில் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தது.
நேற்றிரவு 7.30 மணிக்கு தபால் சேவைகள் அமைச்சர் ஜீவன் குமாரதுங்க அஞ்சல் மா அதிபர் அபேரத்னவிடம் பொதிகளை கையளித்தார். பொதிகளைப் பொறுப்பேற்ற அஞ்சல் மா அதிபர் இன்று காலை 715 மணியளவில் பொதிகளுடன் யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தை வந்தடைந்தார்.
அவரை வடக்கு மாகாண பிரதி தபால் மா அதிபர் இரத்தினசிங்கம் வரவேற்று பொதிகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
மெயில் ரயிலின் வருகையை சிறப்பிப்பதற்காக அஞ்சல் சேவைகள் ஆரம்பிக்கப்பட்ட போது (1832 ஆம் ஆண்டு) மாட்டு வண்டிலில் பொதிகளை ஏற்றி வந்தததைப் போன்று யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தில் இருந்து பிரதான தபால் நிலையம் வரை மாட்டு வண்டிலில் பொதிகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. பின்னர் அந்தப் பொதிகள் விநியோகத்துக்காக பிரதி அஞ்சல் மா அதிபரால் தபால் ஊழியர்களிடம் வழங்கப்பட்டது.