Ad Widget

யாழ். இந்து மாணவன் கொலை; இரு சந்தேக நபர்கள் கைது!

யாழ். இந்துக் கல்லூரியில் கல்வி பயின்று பல்கலைக்கழகத்துக்குத் தெரிவான மாணவன் ஒருவரை இணுவிலில் அவரது வீட்டில் வைத்துக் கோடரியால் கொத்திக் கொலை செய்தமை தொடர்பில் ஒன்றரை வருடங்களின் பின்னர் இரு சந்தேக நபர்களைப் பொலிஸார் கைது செய்தனர்.

கைதானவர்களிடம் இருந்து வாள்கள், கத்திகள் என்பனவும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் கைப்பற்றப்பட்டது எனவும் தெரியவருகின்றது.

இந்த சம்பவம் குறித்து மேலும் அறியவருவதாவது:-

இணுவில் பகுதியில் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் வீடு ஒன்றில் புகுந்த ஆயுததாரிகள் வீட்டிலிருந்த தந்தையையும் மகனையும் தாக்கிவிட்டு அங்கிருந்த பெறுமதிவாய்ந்த பொருள்களை கொள்ளையடிதத்துச் சென்றனர் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்தத் தாக்குதலில் தலையில் படுகாயமடைந்த சண்முகநாதன் யதுசன் (வயது 20) என்பவர் மரணமடைந்தார். அவரது தந்தையார் படுகாயமடைந்திருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் நடைபெற்று வந்த நிலையில், சுன்னாகம் பொலிஸார் நேற்றுமுன்தினம் இருவரைக் கைது செய்தனர்.

கைதானவர்கள் இருவரும் கிளிநொச்சியில் இடம்பெற்ற மற்றொரு கொலை சம்பவம் ஒன்றிலும் தொடர்புபட்டவர்கள் எனத் தெரியவருகின்றது.

தொடர்புடைய செய்தி

திருடர்களால் தாக்கப்பட்ட மாணவன் மரணம்!

Related Posts