Ad Widget

தமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு முன்மொழிவுகள் வெளியாகியது

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு விடையத்தில் தமிழ் மக்கள் பேரவையினால் புதிய அரசியல் தீர்வு ஒன்று இன்று யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் வைத்து வெளியிடப்பட்டுள்ளது. இந்நிகழ்வின் பிரதம அதிதியாக தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர் க.வி. விக்கினேஸ்வரன் கலந்து கொண்டார். தமிழ் மக்கள் பேரவையின் தேசிய இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வை கண்டடைவது தொடர்பிலான...

பேரவையின் அரசியல் தீர்வுத் திட்ட முன்வரைபு

தமிழ் மக்கள் பேரவையின் நிபுணர் குழுவால் தயாரிக்கப்பட்ட அரசியல் தீர்வுத்திட்ட முன்வரைபு, எதிர்வரும் 31ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் வைத்து வெளியிடப்படவுள்ளது. வடமாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவருமான சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் இந்நிகழ்வு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Ad Widget

பேரவையின் உப குழு தயாரித்த தீர்வு யோசனை முதலமைச்சரிடம் கையளிப்பு!

தமிழ் மக்கள் பேரவையின் உபகுழுவினால் தயாரிக்கப்பட்ட அரசியல் தீர்வுக்கான யோசனைகள் பேரவையின் இணைத்தலைவரும் வடமாகாண முதலமைச்சருமான விக்னேஸ்வரனிடம் கையளிக்கப்பட்டுள்ளது. வடக்கு -கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டு சுயாட்சி அதிகாரத்தை உறுதிப்படுத்தும் வகையில், வடக்கு, கிழக்கு தமிழ் பேசும் மக்களின் தாயகம் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக உபகுழுவின் உறுப்பினர் தெரிவித்தார். கடந்த ஒருமாத காலமாக...

சம்பந்தனின் அறிவிப்பை வரவேற்கிறது தமிழ் மக்கள் பேரவை!

தமிழ் மக்கள் பேரவை தயாரிக்கும் தீர்வுத் திட்ட வரைபு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் கையளிக்கப்பட்டால், அதனைப் பரிசீலிக்கத் தயாராக இருப்பதாக கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கூறியிருப்பதை வரவேற்பதாக தமிழ் மக்கள் பேரவை தெரிவித்துள்ளது. தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டுக் குழுவினால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை கிளிநொச்சியில் நடைபெற்ற தமிழ்த்...

பேரவை உள்ளி்ட்ட அனைத்து தரப்புகளினதும் கருத்துகளை பெற்றே தீர்வுத் திட்டம் தயாரிக்கப்படும்!

தமிழ் மக்கள் பேரவை உட்பட அனைத்து தமிழ்த் தரப்புக்களினதும் கருத்துக்கள் பெறப்பட்டே அரசியல் தீர்வுத் திட்டம் தயாரிக்கப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் கூட்டமைப்பின் விசேட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் நேற்று கிளிநொச்சி கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வடக்கு கிழக்கை...

கூட்டமைப்புக்கு முரணாக செயற்பட மாட்டேன்! தமிழ் மக்களின் உரிமைக்ககாக குரல் கொடுப்பதே பேரவையின் ஒரே இலக்கு!! – முதலமைச்சர்

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு முரணாக நடந்துகொள்ளப் பார்க்கிறேன் என எனக்கு எதிராக குற்ச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இது ஒரு அபத்தமான குற்றச்சாட்டு. தமிழ் மக்கள் பேரவை ஒரு போதும் அரசியல் கட்சியாக மாறாது - எந்த அரசியல் கட்சிக்கு எதிராகவும் செயற்படாது - இதன் ஒரே இலக்குத் தமிழ் மக்களின் உரிமைகள், நலன்களுக்காகக் குரல் கொடுப்பதும் அவற்றுக்காகப்...

தமிழ் மக்கள் பேரவை கலைக்கப்படவில்லை

தமிழ் மக்கள் பேரவை ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தமிழ் மக்கள் பேரவை கலைக்கப்பட்டு விட்டதாக வெளிவரும் செய்திகள் தவறானவை என்பதை தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டுக்குழு தெரிவிக்கின்றது. தமிழ் மக்கள் பேரவையின் செயற்பாடுகளை முடக்கும் நோக்கில் வெளியிடப்படும் இப்பரப்புரைகளைப் பொதுமக்கள் நம்பவேண்டாம் என தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டுக்குழு கேட்டுக்...

தமிழ் மக்கள் பேரவை கலைக்கப்படாது என்கிறார் கஜேந்திரகுமார்!

தமிழ் மக்கள் பேரவை கலைக்கப்படவுள்ளதாக வெளியான செய்தியில் உண்மையில்லை என்று தமிழ் மக்கள் பேரவையின் உறுப்பினரும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். தமிழ் மக்கள் பேரவையினால் நியமிக்கப்பட்ட அரசியல் தீர்வுத் திட்டத்தை தயாரிப்பதற்கான உபகுழுவின் செயற்பாடுகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும், இந்த மாத இறுதியில் அதன் அறிக்கை முன்வைக்கப்படும் என்றும்...

தாயகத்தின் கலாசாரம் பேணத் தயாராகிறது தமிழ் மக்கள் பேரவை!- அனைவரையும் ஒன்றுசேர அழைப்பு

தமிழ் மக்கள் பேரவை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை. தமிழ் மக்கள் பேரவையானது தனது அடுத்த கட்ட நடவடிக்கையாகத் தமிழர் தாயகமெங்கும் கலை, கலாசாரத்தைப் பேணிப் பாதுகாக்கும் பணியை வலுவாக முன்னெடுக்கவுள்ளது. அரசியல் என்ற எல்லை கடந்து தமிழ் மக்களின் உரிமைகள், நலன்களைப் பாதுகாக்கும், நோக்குடன் மக்கள் இயக்கமாக ஆரம்பிக்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவையானது கடந்த 2ஆம்...

தமிழ் மக்கள் பேரவைக்கு மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயரரும் ஆசி

வடக்கு கிழக்கு மக்கள் இணைந்து உருவாக்கிய தமிழ் மக்கள் பேரவை என்ற அமைப்பு காலத்தின் தேவையாகும். இந்த அமைப்பிற்கு எனது ஆசிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன். இவ்வாறு மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் மேதகு யோசப் பொன்னையா ஆண்டகை தெரிவித்தார். இன்றைய தினம் (06.01.2016) தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டுக்குழுவின் சார்பில் பேரவையின் இணைத்தலைவர் த.வசந்தராஜா,...

சிவா பசுபதி விவகாரம் : வெளியான செய்திகள் விஷமத்தனமானவை!

தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்டம் தயாரிக்கும் உப குழுவில் சிவா பசுபதியை பங்கெடுக்குமாறு விடுத்த அழைப்பு தொடர்பாகவும், அதனை அவர் நிராகரித்தது தொடர்பாகவும், வெளியான செய்திகள் விஷமத்தனமானவை என்று வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இனப்பிரச்சினைகளுக்கான தீர்வுத் திட்ட யோசனைகளைத் தயாரிக்கும் உபகுழுவில் பங்கெடுக்குமாறு விடுத்த அழைப்பை சிவா பசுபதி நிராகரித்துவிட்டார் என்று இந்திய...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் தமிழ் மக்கள் பேரவையுடனும் ஈ.பி.ஆர்.எல்.எவ். இணைந்து செயற்படும்

தமிழ் மக்கள் பேரவை தொடர்பாக கிராமங்கள் தோறும் விழிப்புணர்வை ஏற்படுத்தல் மற்றும் அரசியல் தீர்வு தொடர்பான வரைபை மக்களிடம் கையளித்து அவர்களின் கருத்துக்களை பெற்றுக்கொள்ளும் செயற்பாட்டில் முழுப்பங்களித்தல் உட்பட முக்கியமான மூன்று தீர்மானங்கள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியான ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் மத்திய குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈ.பி.ஆர்.எல்.எவ்)...

தமிழ் மக்கள் பேரவையின் அழைப்பை நிராகரித்தார் சிவா பசுபதி!

தமிழ் மக்கள் பேரவையின் அழைப்பை தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சட்ட ஆலோசகரும் சட்ட வல்லுநருமான சிவா பசுபதி நிராகரித்து விட்டார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆஸ்திரேலியாவில் வசிக்கும் சிவா பசுபதி கடந்த வாரம் யாழ்ப்பாணத்துக்கு வந்திருந்தார். அப்போது அவரை வடக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவருமான சி.வி.விக்னேஸ்வரன் தொலைபேசி மூலம்...

தமிழ் மக்கள் பேரவையின் இலக்கு குறித்து தௌிவுபடுத்த வேண்டும்!

அரசியல் ரீதியான கட்சியாக தமிழ் மக்கள் பேரவை செயற்படாது எனக் கூறப்பட்டுள்ள நிலையில், பேரவையின் இலக்கு என்ன என்பதை அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார். இது தொடர்பில் அவர் அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தமிழ் மக்களின் இனப் பிரச்சினை சம்பந்தமாக மிக அவதானமாகவும்...

பேரவையில் இணைவது குறித்து விரைவில் விக்னேஸ்வரனுடன் பேசவுள்ளாராம் கருணா!

தமிழ் மக்கள் பேரவையின் நோக்கங்கள் சிறந்ததாக இருப்பதால், வடமாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவருமான சீ.வி.விக்னேஸ்வரனை விரைவில் சந்தித்துப் பேச்சு நடத்தி அதில் இணைந்து செயற்படவுள்ளதாக முன்னாள் பிரதி அமைச்சர் கருணா எனப்படும் முரளிதரன் தெரிவித்துள்ளார். யுத்தத்தின் பின்னர் தமிழ் மக்களின் பிரச்சினைகளை முறையாக கையாள்வதற்கு சகல தமிழ் மக்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட தமிழ்...