Ad Widget

CID எனக் கூறி யாழில் கத்திக் குத்து – 25,000 ரூபாய் பணம் கொள்ளை

யாழ்ப்பாணத்தில் வீதியில் சென்றுகொண்டிருந்த ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு, படுகாயமடைந்த நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அத்தோடு அவரிடமிருந்த பணமும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மருதனார் மடம் – உரும்பிராய் வீதியில் நேற்று (புதன்கிழமை) இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் செல்லத்துரை செல்வக்குமார் (வயது – 50) என்பவரே கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தவரை, இரண்டு மோட்டார் சைக்கிள்களில் சென்ற நபர்கள் தம்மை புலனாய்வு அதிகாரிகள் என கூறி அவரது அடையாள அட்டையை கேட்டு, சோதனையிட்டுள்ளனர்.

பின்னர் மீண்டும் அவரை சற்றுத்தூரத்தில் வழிமறித்து, அவரை கத்தியால் குத்தி, அவரிடமிருந்த கையடக்க தொலைபேசி மற்றும் 25,000 ரூபாய் பணம் என்பவற்றை கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.

இந்நிலையில், படுகாயமடைந்த அவரை அந்த பகுதியில் வந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

இந்த சம்பவம் குறித்து யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related Posts