குடும்பஸ்தரைக் கொலை செய்த குற்றச்சாட்டில் மூவர் கைது!

முல்லைத்தீவு, முள்ளியவளை, முறிப்பு பகுதியில் குடும்பஸ்தர் ஒருவரைக் கொலை செய்த குற்றச்சாட்டில் மூவரைப் பொலிஸார் நேற்றைய தினம் கைது செய்துள்ளனர். முல்லைத்தீவு முள்ளியவளை முறிப்பு பகுதியில் குடும்பஸ்தர் ஒருவருக்கும் ஒரு குழுவினருக்குமிடையில் கடந்த 13ஆம் திகதி இடம்பெற்ற கைகலப்பில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் குறித்த நபர் சிகிச்சை பலனின்றி...

இன்று முதல் குடிவரவு-குடியகல்வு திணைக்களத்தின் 24/7 சேவை!

கடவுச்சீட்டு விநியோகத்திற்காக குடிவரவு-குடியகல்வு திணைக்களம் இன்று முதல் வாரத்தின் 7 நாட்களிலும் 24 மணிநேரமும் இயங்கும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். அதன்படி, கொழும்பு, பத்தரமுல்லைக்கு விசேட பஸ் சேவை இன்று முதல் இரவு வேளைகளில் இடம்பெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
Ad Widget

வடக்குக்கு வரும் நிதி திரும்பி செல்ல கூடாது-வடக்கு மாகாண ஆளுநர்!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வாக்குறுதியளித்தவாறு வடக்கு மாகாணத்துக்கு பல்வேறு திட்டங்களுக்கு பெருமளவு நிதி ஒதுக்கியுள்ளார் என்றும் அவருக்கு எமது வடக்கு மக்கள் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் திட்டமீளாய்வு கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற போதே அவர் இதனை...

மது போதையில் அரச பாடசாலைக்குள் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

மது போதையில் அரச பாடசாலை ஒன்றிற்குள் சென்று மாணவிகளிடம் அநாகரீகமாக செயற்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் திங்கட்கிழமை (17) கைது செய்யப்பட்டுள்ளதாக மல்லாவி பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் முல்லைத்தீவு, மல்லாவி பிரதேசத்தில் உள்ள அரச பாடசாலை ஒன்றில் இடம்பெற்றுள்ளது. மல்லாவி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கைது...

பாண் விலை குறைப்பு!!

ஒரு இறாத்தல் பாணின் விலையை 10 ரூபாவால் குறைக்க பேக்கரி உரிமையாளர்கள் இணங்கியுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. கோதுமை மாவின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து மேற்படி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக வர்த்தக அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரீமா மற்றும் செரண்டிப் நிறுவனங்கள் ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை 10 ரூபாவால் குறைத்துள்ளமை...

மே மாதம் வரை வெப்பநிலை தொடரும் : வளிமண்டலவியல் திணைக்களம்

நாட்டில் கொழும்பு உள்ளிட்ட 16 மாவட்டங்களில் மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை அவதானத்துக்குரிய மட்டத்தில் காணப்படுவதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. எனவே குழந்தைகள் மற்றும் சிறுவர்களை வாகனங்களில் தனித்து விட வேண்டாம் என்றும், வெளியிடங்களில் மேற்கொள்ளக் கூடிய செயற்பாடுகளை இயன்றளவுக்கு மட்டுப்படுத்திக் கொள்ளுமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இந்த வெப்பநிலை எதிர்வரும் மே மாதம் வரை...

அரச ஊழியர்களின் சம்பளம் எவ்வாறு அதிகரிக்கிறது??

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளின்படி, அரச ஊழியரின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ.15,750 ஆல் அதிகரிக்கப்படும். இது 2027 வரை மூன்று கட்டங்களாக அடிப்படை சம்பளத்தில் சேர்க்கப்படும். அதன்படி, இந்த ஆண்டு அரச ஊழியரின் அடிப்படை சம்பளம் குறைந்தபட்சம் ரூ.5,975 ஆக உயர்த்தப்படும். மேலும், இதுவரை அரச ஊழியரின் சம்பளத்தில் சேர்க்கப்பட்ட...

கோதுமை மாவின் விலை குறைப்பு!!

பிரீமா மற்றும் செரண்டிப் நிறுவனங்கள் இன்று முதல் (18) கோதுமை மாவின் விலையைக் குறைக்க தீர்மானித்துள்ளன. இதற்கமைவாக, ஒரு கிலோ பிரீமா மற்றும் செரண்டிப் கோதுமை மாவின் விலைகள் 10 ரூபாவால் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் வாழ்க்கைச் செலவுக் குறைப்புத் திட்டத்திற்கு அமைவாக, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

ஜனாதிபதியின் வரவு செலவு திட்டத்தையிட்டு மகிழ்ச்சியடைகிறேன்; வைத்தியர்களுக்கு எந்த நிவாரணமும் இல்லை – அர்சுனா இராமநாதன்

யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக ஜனாதிபதியின் வரவு செலவு திட்டத்தையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். என்றாலும் வைத்தியர்களுக்கு எந்த நிவாரணமும் இல்லாமல் இருப்பதையிட்டு கவலையடைகிறேன் என யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்சுனா இராமநாதன் தெரிவித்தார். ஜனாதிபதியின் வரவு செலவுத் திட்ட உரையை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு கூறினார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், வரவு...

யாழ். மாவட்ட செயலகத்துக்கு முன்னால் வேலையில்லா பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்

வேலை வாய்ப்பினை வழங்குமாறு கோரி வேலையில்லா பட்டதாரிகள் இன்றைய தினம் (14)யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்துக்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பட்டதாரிகள் கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்றைய தினம் 2025ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு - செலவு திட்டம் தொடர்பான ஒருங்கிணைப்பு குழு கூட்டமானது யாழ். மாவட்ட...

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு பிணை!!

தையிட்டியில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட விகாரையை இடிக்க மக்கள் ஒன்று சேர வேண்டும் என்று சமூக ஊடகங்களில் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் பெயரை குறிப்பிட்டு பரப்பப்பட்ட துண்டுப்பிரசுரம் தொடர்பாக இன்று வெள்ளிக்கிழமை (14) நீதிமன்றத்தில் ஆஜரான பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு பிணை வழங்கப்பட்டது. யாழ்ப்பாணம் தையிட்டி திஸ்ஸ விகாரையை இடித்து அகற்ற சமூக வலைத்தளங்களில் துண்டுப்பிரசுரத்தை பரப்பினார்...

கிளிநொச்சி வைத்தியசாலையில் தீ!; காலாவதியான தீயணைப்புக் கருவிகள் இயங்காததால் பதற்றம்!

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் நேற்று (13) திடீரென எக்ஸ்ரே பிரிவில் தீ பரவியபோது, தீயினை கட்டுப்படுத்த வைத்தியசாலையில் பொருத்தப்பட்டுள்ள தீயணைப்புக் கருவிகளை பயன்படுத்தியபோதும் அவை இயங்கவில்லை. அதனையடுத்து, நெதர்லாந்து அரசின் நிதி உதவியில் வைத்தியசாலைக்கு அருகில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள விசேட பெண்கள் மருத்துவமனை கட்டடத்தில் பொருத்தப்பட்டிருந்த தீயணைப்புக் கருவிகளை கொண்டுசென்று, பயன்படுத்திய பின்னரே தீ கட்டுப்பாட்டுக்குள்...

இன்று முதல் மின் தடை இல்லை!!

இன்று (வெள்ளிக்கிழமை) முதல் மின் விநியோகத் தடை அமல்படுத்தப்படாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை கடந்த ஞாயிற்றுக் கிழமை நாடு முழுவதும் ஏற்பட்ட திடீர் மின்தடை காரணமாக நுரைச்சோலை அனல் மின்நிலையத்தின் 3 மின்பிறப்பாக்கிகள் செயலிழந்திருந்தன இதன் காரணமாக, மின்சார தேவையை நிர்வகிக்க முடியாததால், கடந்த திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் சுழற்சி...

கஜேந்திரகுமார் எம்.பிக்கு நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை!

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை நாளை (14) மல்லாகம் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவுகளை மீறி யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தியதற்காக, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது . யாழ்ப்பாணத்தில் உள்ள தையிட்டி திஸ்ஸ விஹாரைக்கு முன்பாக நாடாளுமன்ற உறுப்பினர் தலைமையிலான குழு , போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக காங்கேசன்துறை காவல்துறைக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில்...

தையிட்டி சட்டவிரோத விகாரை விவகாரம் – தொடர்ந்தும் அதனை நிர்வகிக்க முடியாது என பாதுகாப்பு அமைச்சு தெரிவிப்பு

தையிட்டி சட்டவிரோத விகாரை தொடர்பில் இராணுவத்தினருடனும் சம்பந்தப்பட்ட அமைச்சுகளுடனும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதாக பௌத்தசாசன அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த விடயம் தேசிய ஐக்கியம் தொடர்பில் உணர்வுபூர்வமானதாக காணப்படுவதை கருத்தில் கொண்டு,இது தொடர்பில் காணப்படும் குழப்பங்களிற்கு தீர்வை காண்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக பௌத்தசாசன அமைச்சின் செயலாளர் ஏஎம்பிஎம்பி அத்தப்பத்து தெரிவித்துள்ளார். இராணுவம் தற்போது அந்த ஆலயத்தை நிர்வகித்துவந்தாலும் அரசாங்கம்...

தையிட்டியில் தமிழ் குடும்பங்களின் காணி உரிமைகளில் கை வைப்பது ஒவ்வொரு தமிழனின் தலையிலும் கை வைப்பதற்கு சமமானது- கஜேந்திரகுமார்

தையிட்டியில் அந்த பகுதியை சேர்ந்த தமிழ் குடும்பங்களின் காணி உரிமைகளில் கை வைவக்கின்ற போது, ஒவ்வொரு தமிழனின் தலையிலும் கை வைப்பதற்கு அது சமமானது என நாங்கள் கருதவேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். சட்டவிரோத விகாரைக்கு எதிராக தையிட்டியில் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட...

இன்றும் மின்வெட்டு !

நாடளாவிய ரீதியில் மின்வெட்டை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மின் மற்றும் வலுச்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இன்று வியாழக்கிழமை (13) மாலை 5.00 மணி முதல் இரவு 9.30 மணி வரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலத்திற்கு மின்வெட்டை அமுல்படுத்தவுள்ளதாக மின் மற்றும் வலு சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. தற்காலிக மின்வெட்டுக்கு பொதுமக்கள் தயாராக இருக்குமாறு அமைச்சு கேட்டுக்...

தையிட்டி விகாரை விவகாரம்; காணி உரிமையாளர்கள் இன்று ஆர்ப்பாட்டம்!!

தையிட்டி விகாரையின் காணி தொடர்பில் இன்று (11) பாரிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது. காணி உரிமையாளர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளனர். விகாரைக்காக சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்குப் பதிலாக, மாற்றுக்காணிகளைப் பெறுவது தொடர்பில் தாம், ஒருபோதும் இணக்கம் தெரிவிக்கவில்லை என்றும் உரிமையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும், இவ்விடயம் குறித்து காணி உரிமையாளர்களுடன் கலந்துரையாடாமல் வேறு நபர்களுடன் கலந்துரையாடப்பட்டு முடிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும்...

தையிட்டி விகாரை விவகாரம்: யாழ் மக்களின் கருத்தை அறிய வேண்டும்!!

தையிட்டி விகாரையின் காணி தொடர்பில் யாழ்ப்பாண மக்களின் விருப்பத்தை முதலில் கவனத்திற் கொள்ள வேண்டுமென, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். தையிட்டி விகாரைக் காணி தொடர்பில் காணி உரிமையாளர்கள் இன்று (11) ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளமை குறித்து கருத்து வெளியிட்டபோதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதுபற்றித் தெரிவித்த அமைச்சர்:...

தையிட்டி விகாரை பிரச்சினை என்பது ஒட்டுமொத்த தமிழர்களின் பிரச்சினை என்பதை உணராவிடில் பாரிய ஆபத்திற்கே இட்டுச் செல்லும்!!

தையிட்டி விகாரை பிரச்சினை என்பது ஒட்டுமொத்த தமிழர்களின் பிரச்சினை என்பதை உணராவிடில் பாரிய ஆபத்திற்கே இட்டுச் செல்லும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அவரால் திங்கட்கிழமை (10.02.2025) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இராணுவ...
Loading posts...

All posts loaded

No more posts