தமிழர்தேசம், இறைமை, சுயநிர்ணய உரிமை அடிப்படையில் சமஸ்டித்தீர்வை அடைய வரலாற்றில் இன்னொரு சந்தர்ப்பம்

எழுகதமிழால் பேரெழுச்சி கொண்டு தமிழர்தேசம், இறைமை, சுயநிர்ணய உரிமை அடிப்படையில் சமஸ்டித்தீர்வை அடைய வரலாற்றில் இன்னொரு சந்தர்பம் தமிழ் மக்களே தவறவிடாதீர்கள் எனவும் இலட்சமாய் முற்றவெளி நோக்கி அணிதிரளுங்கள் எனவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் எழுக தமிழ் நிகழ்வு தொடர்பாக வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார். அதன் முழு வடிவம்..

மண்பறிப்பை தடுப்பது தமிழர்கள் ஒவ்வொருவரின் வரலாற்றுக் கடமை

எழுக தமிழ் பேரணி குறித்து பேராசிரியர் ஓவியர் புகழேந்தி. கருத்து எனது அன்பான ஈழத்தமிழ் உறவுகழே வணக்கம். இந்த அறிக்கையின் வாயிலாக உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன் என்று கூறமுடியாத சூழலிலும் மனநிலையிலும் கனத்த இதயத்தோடு பல்வேறு நினைவுகளைச் சுமந்து இதை எழுதுகின்றேன். இலங்கையில் தமிழினம் கடந்த எழுபது ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு துன்பங்களை துயரங்களை இழப்புகளை...
Ad Widget

எம் தாய்மொழி தமிழைப் போற்றி பாதுகாக்க வேண்டியது எமது கடமை

மாணவர்கள் பல்வேறு மொழிகளிலே பாண்டித்தியம் பெற்றிருத்தல் இன்றியமையாததாகும். தாய்மொழி தமிழை போற்றிப்பாதுகாக்க வேன்டியது எமது கடமை. அதே சமயம் எமது சகோதர மொழியாகிய சிங்களத்தையும் கற்றுக்கொள்ளுங்கள். இது மக்களிடையே கருத்துக்களை வெளியிடவும் புரிந்துணர்வை ஏற்படுத்தவும் உறுதுணையாக இருக்கும் என பிரதம நீதியரசர் ஸ்ரீபவன் யாழ். இந்துக்கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு வைபவத்தில் நேற்று திங்கட்கிழமை கலந்து கொண்டு...

சாவகச்சேரி பிரதேச சபைக் கூட்டத்தில் தமிழரசுக்கட்சியினர் அடாவடி!

சாவகச்சேரியில் நேற்று இடம்பெற்ற பிரதேசசபைக் கூடத்தில் தனியார் தொலைக்காட்சி சேவையைச்சேர்ந்த ஊடகவியலாளர்கள் நிகழ்வைப் பதிவு செய்துகொண்டிருந்த சமயம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசாவும், எம்.ஏ.சுமந்திரனும் ஊடகவியலாளர்களை வலுக்கட்டாயமாக அங்கிருந்து வெளியே அனுப்பியுள்ளனர். இதற்கு மக்கள் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளர். தகவல் உரிமைச்சட்டம் நல்லாட்சி அரசாங்கத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளபோதிலும், கூட்டத்தில் ஊடகவியலாளர்களை அனுமதிக்காமை...

முதல்வருக்கெதிராக மக்கள் போராட்டம்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்துக்கு வருகைதந்த அதிகாரிகள் அமைச்சர்களைத் திசைதிருப்பு முகமாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரது ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம் ஒன்று புதுக்குடியிருப்பு,கரைதுறைப்பற்று, ஒட்டுசுட்டான் பிரதேச செயலகங்களுக்கு முன்பு நேற்று (19.09.2016) நடத்தப்பட்டுள்ளது. வடக்குமாகாண முதலமைச்சருக்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதாக பின்னர் கிடைத்த தகவல்கள் தெரிவித்தன. குறிப்பாக மீள் குடியேற்ற அமைச்சரால்...

கிளிநொச்சி வர்த்தகர்களுக்கு இழப்பீடு பெற்றுத் தரப்படும்

கடந்த வெள்ளிக்கிழமை தீயினால் எரிந்து நாசமான கிளிநொச்சி பொதுச்சந்தையில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நட்டஈட்டை பெற்றுத் தர முயற்சி எடுக்கப்படும் என தீயினால் எரிந்து நாசமான கிளிநொச்சி பொதுச்சந்தையை நேற்று (திங்கட்கிழமை) பார்வையிட்ட பின்னர் மாவை சேனாதிராசா தெரிவித்தார். நேற்றய தினம் நாடளுமன்ற உறுப்பினரான சிறீதரன், உள்ளுராட்சி உதவி ஆனையாளர் பிரபாகரன், பிரதேச சபைச்செயலாளர்...

அதிகார பகிர்வின் மூலமே இனப்பிரச்சினைக்கு தீர்வு : யாழில் அமைச்சர் மனோ

தேசிய இனப்பிரச்சினைக்கு அதிகார பகிர்வின் மூலம் தான் தீர்வு என்பதில் திட்டவட்டமான நிலைப்பாட்டினைக் கொண்டுள்ளதாக தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கருமமொழிகள் அமைச்சர் மனோ கணேசன் யாழில் தெரிவித்தார். தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கருமமொழிகள் அமைச்சின் ஏற்பாட்டில் தேசிய சகவாழ்வு மேம்பாட்டிற்கான ஊடகவியலாளர்களுக்கான இரு நாள் செயலமர்வு நேற்று (திங்கட்கிழமை) யாழ்....

இரந்துண்ணும் ஏதிலிகளாக மாற்றப்பட்டுள்ளனர் : முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்

'முன்னைய அரசியல் தலைமைகள், தமது அரசியல் சுயலாபங்களுக்கும் தமது நாடாளுமன்ற இருப்பைத் தக்கவைத்துக் கொள்வதற்கும், அப்பாவிச் சிங்கள மக்களை பிழையான வழிகளில் நெறிப்படுத்தி, அவர்களிடையே பொய்ப்பிரசாரங்களையும் இனவாதத்தைத் தூண்டக்கூடிய பிரசாரங்களையும் முடுக்கிவிட்டமையால் தான், இலங்கையின் இனங்களுக்கிடையிலான முரண்பாடுகள் ஏற்பட்டு, பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பலியாகின' என்று, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், நேற்றுத் திங்கட்கிழமை (19) கூறினார். 'இந்த...

சீகா வைரஸ் காய்ச்சல் இப்போதைக்கு இலங்கையில் இல்லை

சீகா வைரஸ் காய்ச்சல், இதுவரை இலங்கையில் எவருக்கும் தொற்றவில்லை என்று தெரிவித்த சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பீ.ஜி.மஹிபால ஹேரத், சிலாபம் - நல்லரசன்கட்டு பகுதியில் உயிரிழந்த இரு மூதாட்டிகளும், ஒருவகை வைரஸ் காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட நிலையிலேயே உயிரிழந்துள்ளனர் என்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாகவும் கூறினார். சுகாதாரக் கல்விப் பணிமனையில், நேற்றுத் திங்கட்கிழமை (19) நடைபெற்ற ஊடகவியலாளர்...

இராமேஸ்வரம் கடற்பகுதி ஆய்வு செய்யப்பட்டதன் மர்மம் என்ன?

இந்திய மத்திய அரசின் உயர் அதிகாரி திடீரென்று இராமேஸ்வரம் அருகே கடல் ஆய்வு நடத்தியது, குளச்சல் துறைமுகத்திற்கு சாதகமாக அமையும் வகையில் மாற்றுப்பாதையில் சேது சமுத்திர திட்டமா, அல்லது தனுஷ்கோடி, தலைமன்னார் இடையே கடலில் 23 கி.மீ. பாலம் அமைக்கும் திட்ட ஆய்வா என்பது மர்மமாக உள்ளது. இராமேஸ்வரம் தீவு அருகே கடந்த வாரம் கடற்கரை...

நுவன் குலசேகர பிணையில் விடுதலை

கடவத்தை - ரன்முத்துகல பகுதியில் இடம்பெற்ற விபத்து தொடர்பில் கைதுசெய்யப்பட்ட இலங்கை அணி வீரர் நுவன் குலசேகர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவரது வாகனம் மோதியதில் 28 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்தமையை அடுத்து அவர் கைதுசெய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் இன்று

2015 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றி சித்தி பெற்ற மாணவர்களுக்கான பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகள் இன்று வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

புதுக்குடியிருப்பில் அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேசசெயலர் செயலகத்திற்கு முன்னாள் அமைதியான முறையிலான கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பரிவிற்குட்பட்ட பகுதிகளில் இராணுவத்தினர் கையகப்படுத்தியுள்ள காணிகளை விடுவிக்குமாறும், காணி பிணக்குகளிற்கு தீர்வை தருமாறு கோரியும், மற்றும் வீட்டுத்திட்டத்தை வழங்குமாறு வலியுறுத்தியும் பாதிக்கப்பட்ட மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்டத்தின் மூன்று...

இலங்கையிலுள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு ஓர் அறிவித்தல்

சீகா வைரஸ் (Zika) தொற்றுள்ள நாடுகளுக்கு பயணிப்பதை கர்ப்பிணிப் பெண்கள் தவிர்க்குமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. மேலும், சீகா வைரஸ் மற்றும் சிக்கன்கூனியா போன்ற தொற்றுக்களைத் தடுக்கும் நோக்குடன் இலங்கையின் பிரதான விமான நிலையங்கள் மற்றும் கொழும்பு துறைமுகம் ஆகியன அதி அவதானத்திற்குரிய பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. சிங்கப்பூர், மலேஷியா, பிரேசில் மற்றும் தென் அமெரிக்கா ஆகிய...

95 முன்னாள் போராளிகளுக்கு பரிசோதனை

விச ஊசி விவகாரம் தொடர்பில் முன்னாள் போராளிகளுக்கான மருத்துவ பரிசோதனையில் மூன்றாம் வாரத்தில் 22 பேர் மருத்துவ பரிசோதனையை மேற்கொண்டுள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் மருத்துவ பரிசோதனையை மேற்கொண்ட முன்னாள் போராளிகளின் எண்ணிக்கை 95 ஆக அதிகரித்துள்ளது. புனர்வாழ்வு பெற்று விடுதலையான முன்னாள் போராளிகளுக்கான மருத்துவ பரிசோதனைகள், வடமாகாண வைத்தியசாலைகளில்...

இளைஞர்கள் கடலில் மூழ்கி மாயம் : சோகத்தில் பெற்றோர் தற்கொலை

மட்டக்களப்பு – பாசிக்குடா கடலில் மூழ்கி இரு இளைஞர்கள் காணாமல் போயுள்ள நிலையில், சோகம் தாளாத பெற்றோர் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இவ்விடயம் தொடர்பில் நாம் பொலிஸ் தலைமையக ஊடகப் பிரிவை தொடர்புகொண்டு கேட்டபோது, சண்முகம் சுரேஸ்குமார் (வயது 22) மற்றும் சண்முகம் சதீஸ்குமார் (வயது – 18) ஆகிய இளைஞர்கள் பாசிக்குடா...

யாழ்ப்பாணத்தில் பழையபொருட்களைக் கொள்வனவு செய்வோர் கஞ்சா விற்பனையில்

யாழ்ப்பாணத்தில் பழைய பொருட்களைக் கொள்வனவு செய்வதாக தெரிவித்து வாகனங்களில் வருபவர்கள் போதைப்பொருட்களை விற்பனை செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டுவருவதாக பொது மக்களும் சிவில் அமைப்புக்களும் குற்றம்சுமத்தியுள்ளன. யாழ். மாவட்ட சிவில் பாதுகாப்புக் குழு கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க தலைமையில் யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன்போதே இந்த...

”எழுந்து நிற்போம்” வைத்தியர் சங்க கவனயீர்ப்பு போராட்டத்திற்கு ஆசிரியர் சங்கம் ஆதரவு

போதையால் மூழ்கடிக்கப்பட்டிருக்கும் வடமாகாணத்தை மீட்டெடுத்து எம் உறவுகளை பாதுகாக்க அனைவரும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 10 ஆம திகதி ஒரு மணிநேர கவனயீர்ப்பில் ஈடுபடுவோம் என இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்விடுத்துள்ளது. யாழப்பாணம் போதனா வைத்தியசாலை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தால் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள எழுந்து நிற்போம்...

தியாகதீபம் லெப்.கேணல் திலீபனுக்கு ஆனந்தசங்கரி அஞ்சலி செலுத்தினார்!

தியாகதீபம் லெப்.கேணல் திலீபனின் 29ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு நேற்று கிளிநொச்சி மாவட்டத்தில், தமிழர் விடுதலைக்கூட்டணி அலுவலகத்தில் நடைபெற்றது. ஜனநாயகப் போராளிகள் கட்சியினரால் ஒழுங்குபடுத்தப்பட்ட இந்நிகழ்வில் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர்கள் தமிழ் மக்களின் விடுதலைக்காக ஐந்தம்சக் கோரிக்கையை முன்வைத்து உண்ணாநோன்பிருந்த தியாகி லெப்.கேணல் திலீபனின் திருவுருவப் படத்துக்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்வில் தமிழர் விடுதலைக்...

வடக்கு மக்கள் காவல்துறையினருடன் இணைந்து செயறப்படவேண்டும்!

வடக்கு மக்கள் காவல்துறையினருடன் இணைந்து செயற்படவேண்டுமென காவல்துறைமா அதிபர் பூஜித ஜெயசுந்த தெரிவித்துள்ளார். ஒட்டுசுட்டானில் காவல்துறை நிலையம் ஒன்றைத் திறந்துவைத்து உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும், காவல்துறையினருக்கும் தமிழ் மக்களுக்குமிடையில் ஐக்கியமேற்படுத்தப்படுவது அவசியமானது எனவும் தெரிவித்த அவர், இந்தப் புதிய காவல்துறை நிலையத்தை மக்கள் பேணிப் பாதுகாப்பார்கள் எனவும் நம்பிக்கை வெளியிட்டிருந்தார்.
Loading posts...

All posts loaded

No more posts