Ad Widget

நாவற்குழி பகுதியில் ஒருவர் வெட்டிக்கொலை

நாவற்குழி பகுதியில் சனிக்கிழமை (08) இரவு, குடும்பஸ்தர் ஒருவர் இனந்தெரியாத நபர்களினால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் தச்சன்தோப்பு பகுதியைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான க.சந்திரசேனரன் (வயது 42) என்பவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

குடும்பஸ்தர் வேலைக்குச் சென்று சைக்கிளில் வீடு திரும்பும் போது, அவரை வழிமறித்த சிலர் இந்த வாள்வெட்டை மேற்கொண்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவித்த பொலிஸார், இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts